12.12.06

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே

படம்: எங்க வீட்டு மஹாலஷ்மி
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
இசை: மாஸ்டர் வேணு


சீர்காழி:
ம்ம் ம்ம் .. மூட்டையைக் கட்டிக்கோ

சுசீலா:
எதுக்கு?

சீர்காழி:
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

சுசீலா:
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

சீர்காழி:
கெட்டவுங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
கெட்டவுங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும்
என்பதாலே
பட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும்
போவதாலே
கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

சுசீலா:
வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்
பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
ஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்
அஞ்சிக்கி ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்

சீர்காழி:
எப்படி?

சுசீலா:
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
மாப்பிள்ளே ..ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணாம போனா
பின்னாலே கேளு மாமா

சீர்காழி:
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு...
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

சுசீலா:
மேலே?

சீர்காழி:
இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி
பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும்
வாங்கி வாடி

சீர்காழி:
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

சுசீலா:
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுன் ஆயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

சுசீலா:
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலையும் செய்வே துணிந்து
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே .. இன்னும் கேளு ...

சீர்காழி:
அப்புறம்?

சுசீலா:
போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே
புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பொண்ஜாதி பேச்சைக் கேளு

சீர்காழி:
அப்பிடியா? ஆஹா...
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது
பட்டணம் தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணைத் தொறந்தவ நீ தான்
பொண்டாட்டி தாயே

சுசீலா:
மாமா...

சீர்காழி:
ஏம்மா?

சுசீலா:
என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு
என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு

சீர்காழி:
எங்கப்பனானே சத்தியம் ..
சத்தியம் .. சத்தியம் ..

இருவரும்:
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்

ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்

23.10.06

அமுதை பொழியும் நிலவே

படம் - தங்கமலை ரகசியம்
பாடியவர்: பி சுசீலா

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்


புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

12.10.06

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில்...

படம்: கார்த்திகை தீபம்
பாடியவர்: பி சுசீலா
பாடியவர்:T.M.சௌந்தரராஜன்
இசை: R.சுதர்சனம்
பாடலாசிரியர்:ஆலங்குடி சோமு


எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..

தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..

உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா..
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா..

(எண்ணப்பறவை)

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா..
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா..

அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா..
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா..

(எண்ணப்பறவை)

11.10.06

காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே

படம் : சித்தி
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : M.S.V

நடிகை : பத்மினி

பாடல் ஒலிவடிவில்

பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்

எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ


காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே

நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி

(காலமிது)

மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..

மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது

(காலமிது)

ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்

(காலமிது)

ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ

10.10.06

தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன

படம் : சித்தி
குரல் : T.M.S+சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : ஜெமினி, பத்மினி

தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன

பொன்மேனி பார்ப்பதென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத்தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன

(பொன்)

அங்கிருந்து ஆடிவந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
வெள்ளிக்கெண்டை மீனைப் போலே
துள்ளும் கண்கள் சொல்வதென்ன
துள்ளும் கண்கள் சொல்வதென்ன

சொன்னபின்னும் கேள்வி என்ன
துருவித் துருவிக் கேட்பதென்ன
முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
முத்தையா உன் வேகமென்ன
முத்தையா உன் வேகமென்ன

(தண்ணீர்)

மாலை வெய்யில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
நெஞ்சம் போடும் தாளம் என்ன
நெஞ்சம் போடும் தாளம் என்ன

அந்தி சாயும் நேரம் வந்தும்
மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே
அம்மம்மா ஏக்கமென்ன
அம்மம்மா ஏக்கமென்ன

(தண்ணீர்)

27.9.06

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி


காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலைவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

10.9.06

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்...

படம் : பிராப்தம்
குரல் :T.M.S+சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை :M.S.V
நடிகர்கள் : சிவாஜி, சாவித்திரி

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது

(சொந்தம்)

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

(சொந்தம்)

நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் மோதி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

(சொந்தம்)

3.9.06

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

படம் : பட்டணத்தில் பூதம்
குரல் : T.M.S., சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை :M.S.V.
நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா


அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

28.8.06

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

படம்: அருணோதயம்
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்
இசை: K.V.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்


உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..
குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..
மானைப் பார்த்து வேங்கையென்பான்..
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..
அதையும் சில பேர் உண்மையென்பார்..
யானையைப் பார்த்த குருடனைப் போல்..
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நன்பனுக்கு..
கைகொடுத்தேன் அவன் கரையேற..
கரைக்கு அவனும் வந்து விட்டான்..
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)

1.8.06

மதுரையில் பறந்த மீன்கொடியை உன்...

படம்-பூவா தலையா
பாடியவர்-T.M.சௌந்தரராஜன்
இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்-கவிஞர் வாலி


http://www.raaga.com/getclip.asp?id=999999026690

மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே..
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
உன் புருவத்தில் கண்டேனே..
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே..
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..உன்னை
தமிழகம் என்றேனே..

(மதுரையில்..)

காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ..
குடந்தையில் பாயும் காவிரி அலைதான்
காதலியே உன் பூங்குழலோ..
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ..
தூத்துக்குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ..

(மதுரையில்..)

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ..
புதுவை நகரில் புரட்சிக் கவியில்
குயிலோசை உன் வாய் மொழியோ..
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ..
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ..
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..

(மதுரையில்..)

நிலவே என்னிடம் நெருங்காதே

பாடியவர் - பி.பி.சிறீனிவாஸ்
படம் - ராமு
நடித்தவர் - ஜெமினி கணேசன்


நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...

காதோடுதான் நான் பாடுவேன்

பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி
படம் - வெள்ளி விழா

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

காதோடுதான் நான் பாடுவேன்...

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா?
குல விளக்காக நான் வாழ வழி காட்டவா?

காதோடுதான் நான் பாடுவேன்....

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்
விழியோடுதான் விளையாடுவேன்
உன் மடி மீதுதான் கண் மூடுவேன்

31.7.06

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா

படம்: எதிர் நீச்சல்
பாடியவர்கள்: பி.சுசீலா + TMS
இசை: வி.குமார்
நடிகர்கள்: சௌகார்ஜானகி+ஸ்ரீகாந்த்


சுசீலா:
ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்

TMS:
ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS :
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி.. பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

சுசீலா:
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?

TMS:
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல
பொறந்திருக்கே ஒரு லட்டு

சுசீலா:
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க
ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட
எடுப்பா இருக்கும் மூக்கு

TMS:
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?

சுசீலா:
எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு

சுசீலா:
பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?

TMS :
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

சுசீலா:
என்னத்தை செய்வேள்?

TMS:
சொன்னத்தை செய்வேன்

சுசீலா:
வேறென்ன செய்வேள்?

TMS:
அடக்கி வெப்பேன்

சுசீலா:
அதுக்கும் மேலே?

TMS:
ம்ம்ம் பல்லை உடைப்பேன்

சுசீலா:
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

TMS:
பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?

30.7.06

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்

படம் : உயிரா மானமா
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : விஜயநிர்மலா


ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே
என் கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே
கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே

பாத்திரத்தின் நிறம் போலே
பாலின் நிறம் மாறுவதோ
நேத்திரத்தை மறந்து விட்டு
நீ எங்கே வாடுவதோ
கோடையிலே மர நிழலும்
கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல்
யார் தருவார் என்னுயிரே

விளக்கினிலே நெருப்பு வைத்தால்
வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதினிலே நெருப்பு வைத்தால்
வைத்தவரை எரிக்காதோ
சத்தியத்தை மறந்து விட்டால்
தனி வழியே போக வரும்
தனி வழியே போனாலும்
தலைவிதிதான் கூட வரும்

காட்டிலென்னை நிறுத்தி விட்டு
காதவழி செல்கின்றாய்
காதவழி சென்றாலும்
காதல் வழி மறவாதே
உன்னிடத்தில் ஆசையிலே
நல்ல வழி நானுரைத்தேன்
என்னை நீ மறந்தாலும்
சொன்ன மொழி மறவாதே
மறவாதே.. மறவாதே..

20.7.06

கண்ணிழந்த மனிதன் முன்னே ஓவியம்...

படம்: ஆடிப் பெருக்கு
இசை: ஏ.எம்.ராஜா
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா + பீ.சுசீலா
நடிகர்கள்: ஜெமினி + சரோஜா தேவி


சுசீலா:
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்

ராஜா:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்
இரு காதிருந்தும் பாதியிலே
பாட்டை முடித்தார்
பாட்டை முடித்தார்

சுசீலா:
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
ஆட வந்த மேடையிலே
முள்ளை வளர்த்தார்
அணைக்க வந்த கரங்களுக்கு
தடையை விதித்தார்
காய்ந்து விட்ட மரத்தினிலே
கொடியை இணைத்தார்
தாவி வந்த பைங்கிளியின்
சிறகை ஒடித்தார்

கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்

ராஜா:
கண்ணிருந்தும் ஓவியத்தைக்
காட்டி மறைத்தார்...
காட்டி மறைத்தார்

சுசீலா:
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்
பெண் பெருமை பேசிப் பேசிக்
காலம் கழிப்பார்
தன் பெருமை குலையும் என்றால்
பெண்ணை அழிப்பார்

ராஜா:
முன்னுமில்லை பின்னுமில்லை
முடிவுமில்லையே
மூடன் செய்த விதிகளுக்கு
தெளிவுமில்லையே

சுசீலா:
கண்ணிழந்த மனிதன் முன்னே
ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன் முன்னே
பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்
கண்ணிழந்த மனிதன்
முன்னே ஓவியம் வைத்தார்
இரு காதில்லாத மனிதன்
முன்னே பாடல் இசைத்தார்...
பாடல் இசைத்தார்

16.7.06

பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ

படம் : டிஸ்யூம்
குரல் : மால்குடி சுபா
இசை : விஜய் அன்ரனி
நடிகர்கள் : ஜீவா+சந்தியா




பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ
போராடும் அன்பில் அட ஏன் தான் காயமோ

கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே
இலைகள் உதிர்வதால் கிளையின் சுமைகள் கூடுதே
உதிரும் இலைகளோ மறந்து காற்றில் போகுதே
உடைத்துப் பார்க்கும் இதயம் உனது
படைத்து பார்ப்பதை அறியாதே
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு
நிஜத்தில் உலகத்தில் உடையாதே... உடையாதே..
காதல் போலவே நோயும் இல்லையே
யாவும் உண்மை தானே
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்
கேட்கவில்லை நானே

விலகும்போது நெருங்கும் காதல்
அருகில் போனால் விலகிடுமோ
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி
விருப்பம்போல் அது வலி தருமோ.....
வேறு வேறாக நினைவு போகையில்
காதல் கொள்ளுதல் பாவம்
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே
ஆதி கால சாபம்.

பூ மீது யானை பூவலியை தாங்குமோ
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ

நான் முதல் முதல் பாடிய பாட்டு

படம் : தாய் நாடு
குரல் : T.M.S+P.சுசீலா
பாடல் : ஆபாவாணன்
இசை : மனோஜ்-கியான்
நடிகர்கள் : சத்யராஜ், ராதிகா


நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்

( நான் )

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும் - அந்த
விடைகளில் புதுயுகம் தோன்றும்
கேட்க மறந்த மனிதா - உன்
ஊமை வாழ்வும் இனிதா
அழுதவன் சிரித்திட வேண்டும் - அந்த
சிரிப்பினில் தத்துவம் தோன்றும்
சிரிக்க மறந்த மனிதா - நீ
சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது
புது போராட்டம் காண

நீ முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரம் கேட்டு
இரவில் வந்ததால்.. இருண்டு போனதால்...


கனவுகள் உயிர் பெறவேண்டும் - அது
உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா - அது
கனவை மீட்டுத் தருமா
சிறைகளும் உடை பட வேண்டும் - அதை
உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா - அது
துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது
நீ போராட ஓடி வா

( நான் )

8.7.06

விண்ணோடும் முகிலோடும் விளையாடும்...

படம் : புதையல்
குரல் : சி.எஸ்.ஜெயராமன்+சுசீலா
பாடல் : மாயவநாதன்
இசை : வி-ரா
நடிகர்கள்: சிவாஜி+பத்மினி


விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....

(விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே

காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே

மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

28.6.06

நான் உள்ளதைச் சொல்லட்டுமா

படம் : வசந்த ராகம்
குரல் : ஜேசுதாஸ், சுரேந்தர், சுசீலா
பாடல் : வாலி
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : விஜய்காந்த், ரஹ்மான், சுதா சந்திரன்


நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் கூட வேண்டும்
பொன்மகளும் மன்னவனும் பெருவாழ்வு காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

கூடுகட்டி வைத்திருந்தேன் குருவியோடு வாழ்ந்திருந்தேன்
நாடு விட்டு வந்தபோது நானொருவன் பிழைத்து வந்தேன்
பேதை முகம் காணவில்லை தேடி ஓடக் காலுமில்லை
கண்ணெதிரில் பார்த்தபோது கையணைக்க உரிமையில்லை
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

வீணையொன்று கண்டெடுத்தேன் விரல்கள் மீட்ட ஆசை வைத்தேன்
வேறொருத்தன் சொந்தமென்று மீட்டாமல் நிறுத்தி வைத்தேன்
இன்று வரை தொட்டதில்லை கைவிரலும் பட்டதில்லை
இன்னொருவன் வீணை இது சுதிலயம்தான் கெட்டதில்லை
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

என்னுடைய வானத்திலே இருட்டிய நேரத்திலே
வெண்ணிலவைக் காணவில்லை விடிவிளக்கை ஏற்றி வைத்தேன்
விளக்கேற்றி வைத்தவுடன் வெண்ணிலவும் வந்ததம்மா
வெண்ணிலாவைக் கண்டவுடன் பெண்ணிலாவும் தவித்ததம்மா

நிலவே வந்ததென்று நெய்விளக்கை அணைப்பேனா
நெய்விளக்கு போதுமென்று நிலவைத்தான் வெறுப்பேனா
இருகரை நடுவினிலே நதி போல் ஓடுகிறேன்
விடுகதை நானாகி விடையைத்தான் தேடுகிறேன்
இறைவா... என் இறைவா..
இதற்கொரு பதிலைச் சொல் இறைவா..

நான் உள்ளதைச் சொல்லட்டுமா ஊரறியப் பாடட்டுமா
நல்லவர்கள் வாழவேண்டும் நன்மையெல்லாம் சூழ வேண்டும்
பொன்மகளும் மன்னவனும் நிம்மதியைக் காணவேண்டும்
வாழ்க.. நீங்கள் வாழ்க..
வாழ்வின்.. இலக்கணமாக..

5.6.06

வெண்மதி வெண்மதியே நில்லு

திரைப்படம்: மின்னலே
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: திப்பு
எழுதியவர்: வாலி

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்

உன்னை இன்றோடு நான் மறப்பேனே
நான் மறப்பேனே
உன்னாலே நெல்சில் பூத்த காதல்
மேலும் மேலும் துன்பம்
துன்பம் வேண்டாம்

(வெண்மதி)

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே

தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப் பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகைப் பாட ஒரு மொழியில்லையே
அளந்து பார்க்கப் பல விழியில்லையே
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

ஐந்து நாள் வரை அவள் மொழிந்தது
ஆசையின் மழை அதில் நனைந்தது
நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
இரத்த நாளங்கள் இராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்தபோதும் அவள் எனதில்லையே
மறந்துபோ மனமே

(வெண்மதி)

தாயின் முகம் இங்கு நிழலாடுது

படம்: தங்கைக்காக
பாடியவர்: பி.சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிப்பு: லஷ்மி


தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது


கண்ணில் இமையாக
தங்கை நலமாக
காணும் துணையல்லவோ
பொன்னைக் கொடுத்தேனும்
பூவைக் கொடுத்தேனும்
போற்றும் உறவல்லவொ
தானாட மறந்தாலும்
சதையாடும் என்பார்கள்
தாளாத பாசத்தில்
அண்ணா என்றழைப்பார்கள்
ஆசை மனமுண்டு
பூஜை மலர் உண்டு
தெய்வம் நீயல்லவோ
அண்ணா... தெய்வம் நீயல்லவோ

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

மண்ணில் இடம் கொண்ட
தென்னை இளம் கன்று
மண்ணைப் பிரியாதண்ணா
மங்கை முகம் கொண்ட மஞ்சள் நிறம்
என்றும் பெண்ணைப் பிரியாதண்ணா
தன் வீடு மறந்தாலும் தாய் வீடு மறவாது
தன்னாவி பிரிந்தாலும் அண்ணாவைப் பிரியாது
எங்கே இருந்தாலும் உன்னை மறவாத உள்ளம்
இதுவல்லவோ அண்ணா...
உள்ளம் இதுவல்லவோ

தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது

கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது

30.5.06

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே

படம்:கர்ணன்
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன் -T.K.ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: தேவிகா


ஒலிவடிவில்

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

கால்கள் இங்கே நெளியும் இங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆஆ...

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
மணி கொண்ட கரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனி கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித்
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம் ஆஆஆஆஆஆஅ...
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே ஏஏஏஏஏஏஏ

குழுவினர்:
ஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ

சுசீலா:
இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்

குழுவினர்:
ஆஆஆஆஆ

சுசீலா:
ஈடொன்றும் கேளாமல்
எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை
உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு
நானிங்கு மெலிந்தேன்
ஆஆஆஆஆஆஆ

குழுவினர்:
கண்கள் எங்கே
நெஞ்சமும் எங்கே

சுசீலா:
கண்டபோதே சென்றன அங்கே
குழுவினர்: கண்கள் எங்கே

24.5.06

பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும்

படம் : பெண்ணே நீ வாழ்க
குரல் : ´TMS+சுசீலா
இசை :
நடிகர்கள் : ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

மங்கையரைப் பார்த்ததுண்டு
மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு
மாலையாய்த் தொடுத்ததில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

உன் வீட்டுத் தோட்டத்திலே
ஒரு மரம் தனி மரமாம்
தனி மரம் தவிக்கக் கண்டு
தளிர்க் கொடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

18.5.06

எத்தனை கோடி பணமிருந்தாலும்

படம் : அன்பு எங்கே
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா


எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே
நிம்மதி வேண்டும் வீட்டிலே

உத்தமமான மனிதர்களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே
உலகம் புகழுது ஏட்டிலே

அர்த்த ராத்திரி பனிரெண்டு மணிக்கு
ஆடிக்கொண்டே நுழைவதை
அகப்பட்டதெல்லாம் தூக்கி எறிந்து
ஆர்ப்பாட்டங்கள் செய்வதை
அடுத்த நாளில் நினைத்துப் பார்த்தால்
வெட்கம் வருவது இல்லையா
சின்னையா நீ சொல்லையா

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே

அன்னமிட்டுத் தாலாட்டி
ஆசையோடு வளர்த்தாள் - அந்த
அன்னையரின் எண்ணம் தன்னைக்
கனவினிலே வளர்த்தே
முன்னவர் போல பெயரெடுத்து
முறையோடு வாழும்
முடிவு கொள்வீர் வாழ்வினில் நாளும்
துணை புரிவேன் நானும்

எத்தனை கோடி பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே

17.5.06

துள்ளாத மனமும் துள்ளும்

படம் : கல்யாணப் பரிசு (1959)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்

(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்

(துள்ளாத)

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

படம் : பதிபக்தி (1958)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :


வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப்போனபோது அழுதவள்ளி
புதுமையான நிலையில் - அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்

(வீடு)

16.5.06

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா

படம் : மதனமாளிகை
குரல் : ஜேசுதாஸ், P.சுசீலா
இசை : எம்.பி.ஸ்ரீனிவாசன்
நடிகர்கள் : சிவகுமார், அல்கா

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது - அதன்
இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..

(ஏரியிலே)

மாலையிலே வரும் மன்னனுக்கென்றே
மன்மத ஆராதனை - அந்த
மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..
மங்கல நீராடுது..
ஆ..ஆ..

(ஏரியிலே)

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும் ?
காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்

(ஏரியிலே)

பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ

(ஏரியிலே)

15.5.06

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

படம் : வாழ்க்கைப்படகு
பாடியவர் : PB Srinivas
வரிகள் : கண்ணதாசன்
இசை : MSV

பாடல் ஒலி வடிவில்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன ?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னகை புரிந்தால் என்ன ?
பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று)

பாவை உன் முகதைக் கண்டேன்
தாமரை மலரைக் கண்டேன்
கோவை போல் இதழைக் கண்டேன்
குங்குமச் சிமிழைக் கண்டேன்
வந்ததது கனவோ என்று
வாடினேன் தனியாய் நின்று
வண்டு போல் வந்தாய் இன்று
மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று)

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

படம்: நீங்காத நினைவு
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடிப்பு: விஜயகுமாரி

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

12.5.06

விழியே விழியே உனக்கென்ன வேலை

படம் : புதிய பூமி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
இங்கு நான்கு கண்களூம் உறவாட...

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா

(விழியே)

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும்

(விழியே)

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

படம் : ஆயிரத்தில் ஒருவன்
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : வாலி
நடிகை : ஜெயலலிதா

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

(ஆடாமல்)

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்..

(ஆண்டவனை)

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

(ஆண்டவனை)

11.5.06

அலை பாயுதே கண்ணா...

படம் - அலைபாயுதே
இயற்றியவர் : ஊத்தக்காடு வேங்கடசுப்பையர்
இராகம் : கானடா
தாளம் : ஆதி


பல்லவி:
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

அனுபல்லவி:
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

சரணம்:
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலவு வந்து பாடுமோ

படம்: இராமன் எத்தனை இராமனடி
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: கே.ஆர்.விஜயா


நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்

மாறட்டும்
மனது போல போகட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்

தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ

வாழட்டும்
வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்

அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ

போகட்டும்
புதிய சுகம் காணட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்

ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ

முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ

10.5.06

ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய்...

படம்: வாழ்க்கை வாழ்வதற்கே
பாடியவர்கள்: பீ.பீ. ஸ்ரீனிவாஸ்+பீ. சுசீலா.
இசை: M.S.V+T.K.R
வரிகள்: கண்ணதாசன்
நடிகர்கள்: ஜெமினி - சரோஜா தேவி

ஸ்ரீனிவாஸ்:
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்

சுசீலா:
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்

ஸ்ரீனிவாஸ்:
குடியிருந்த மணல் வீடு
மழையினிலே கரைந்ததம்மா
கொண்டு வந்த ஆசை எல்லாம்
வந்த வழி சென்றதம்மா
அவள் இருந்த மனதினிலே
இருள் இருந்து வாட்டுதம்மா

சுசீலா:
சங்கத்திலே தமிழ் வாங்கி
தங்கத்திலே எழுதி வைத்தேன்
கங்கையிலே படகு விட்டு
காதலிலே மிதந்து வந்தேன்
பாதியிலே பிரித்து விட்டு
படகு மட்டும் சென்றதம்மா

ஸ்ரீனிவாஸ்:
பத்து விரல் மோதிரமாம்
பவழ மணி மாலைகளாம்
எத்தனையோ கனவுகளாம்
எவ்வளவோ ஆசைகளாம்
அத்தனையும் மறைந்ததம்மா
ஆசை நிலா எரிந்ததம்மா

சுசீலா:
கல்யாணம் ஊர்வலமாம்
கச்சேரி விருந்துகளாம்
ஊர் முழுதும் திருநாளாம்
உலகமெங்கும் மணநாளாம்
உலகத்திலே நாண்கு கண்கள்
உறங்காமல் விழிக்குதம்மா

இருவரும்:
ஆத்தோரம் மணலெடுத்து
அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து
ஜோராக குடியிருந்தோம்

9.5.06

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

இசை: வேதா
நடிகை: ஜெயலலிதா
படம்: யார் நீ
வருடம்: 1966
பாடல்: கவியரசு கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா


என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
உலகமே மாறி மாறி பார்க்கும்
போது மயக்கமேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே
போகிறேன் இன்று நீ யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை
பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்
நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

7.5.06

மேகத்தைத் தூது விட்டா

படம் : அச்சமில்லை அச்சமில்லை
குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா
பாடல் : வைரமுத்து
இசை : வி.எஸ். நரசிம்மன்
நடிகர்கள் : ராஜேஷ், சரிதா

சுசீலா :
மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?
எப்ப வந்து தரப்போற ?

ஓடுகிற தண்ணியிலே...
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ...?

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ

செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

மலேஷியா வாசுதேவன்:
அடி கிராமத்துக் கிளியே - என்
கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை புடிக்க வா மயிலே

சுசீலா :
கொடையுமில்ல படையுமில்ல
கூதலுக்கு ஆதரவா
தாவணிய நீ புழிய
தலை துவட்ட நான் வரவா ?

மலேஷியா வாசுதேவன்:
நீ நனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
அயித்த மகன் நான் புழிஞ்சா
அத்தனையும் தேன் வடியும்

சுசீலா :
ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

மலைத் தோட்டத்து குயிலு
இது உமக்காகப் பாடுதுங்க
ஆசையை நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க

மலேஷியா வாசுதேவன்:
அருவி போல அழுகிறேனே
அறிந்து கொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் தாளாதோ

சுசீலா :
வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ - ஒங்க
பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
பல்லு வெளக்கப் போறதெப்போ

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

நிலவே நீ சாட்சி..

படம் : நிலவே நீ சாட்சி
குரல் : பி.சுசீலா
நடிகை : கே.ஆர்.விஜயா

நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..

( நிலவே )

அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

( நிலவே )

ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு

( நிலவே )

கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை

( நிலவே )

5.5.06

துயிலாத பெண் ஒன்று கண்டேன்

திரைப் படம்: மீண்ட சொர்க்கம்
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி


http://www.raaga.com/getclip.asp?id=999999026780


ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
ஓஹோ..

ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

4.5.06

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

படம் : காத்திருந்த கண்கள்
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை :
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி


வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

3.5.06

திங்கள் மாலை வெண்குடையான்

படம் : கரும்பு
குரல் : சுசீலா
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி


பாடலைக் கேட்க இங்கே

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

2.5.06

ஒரு கொடியில் இரு மலர்கள்

திரைப் படம்: காஞ்சி தலைவன்
பாடியவர்கள்: T.M..சௌந்தரராஜன்+பீ. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: ஆலங்குடி சோமு

டி.எம். எஸ்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

சுசீலா:
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா

டி.எம். எஸ்:
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக
என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா

சுசீலா:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

சுசீலா:
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்

டி.எம். எஸ்:
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
நீ சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன்

சுசீலா:
ஒரு கொடியில்

டி.எம். எஸ்:
இரு மலர்கள்

சுசீலா:
பிறந்ததம்மா.. பிறந்ததம்மா

டி.எம். எஸ்:
அண்ணன் தங்கை

சுசீலா: உறவு முறை

டி.எம். எஸ்:
மலர்ந்ததம்மா.. மலர்ந்ததம்மா

இருவரும்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா

1.5.06

காகித ஓடம் கடல் அலை மீது

படம் : மறக்க முடியுமா ?
குரல் : சுசீலா
பாடல் : மு.கருணா நிதி
இசை : ராமமூர்த்தி


காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

(காகித)

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

(காகித)

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

(காகித)

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

படம் : ராஜா
குரல் : TMS, சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

ஓ...ராஜா.....
ராஜா !

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா ?
காதல் கவிதை சொல்லு ராஜா...

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னைப் பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு

( நீ )

கொஞ்ச நேரம் என்னைத் தாலாட்டு
கொஞ்சும் போதும் என்னைப் பாராட்டு
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்

காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

வைரம் என்றே எனை நீ பாடு
வாங்கிக் கொள்வேன் அதைக் கையோடு
தந்தது பிறருக்குத் தெரியாது
சந்தித்த ரகசியம் புரியாது

நாளையும் மனம் உன்னைத் தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

படம் : பார்த்தால் பசிதீரும்
பாடியவர் : TMS


பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
(2)
நீ ஒருவனை நம்பி வந்தாயோ -இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
(2)

தாயாரைத் தந்தை மறந்தாலும் -தந்தை
தானென்று சொல்லாத போதும்
(2)
தானென்று சொல்லாத போதும்

ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.
(பிள்ளைக்கு...)

உள்ளோருக்கு செல்வங்கள் சொந்தம் -அது
இல்லாருக்கு உள்ளங்கள் சொந்தம்
(2)
இல்லாருக்கு உள்ளங்கள் சொந்தம்

இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
(பிள்ளைக்கு...)

30.4.06

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

படம் : மீண்ட சொர்க்கம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : டி.சலபதி ராவ்
நடிகை : பத்மினி


கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

படம் : பறக்கும் பாவை
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சரோஜாதேவி


யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

(யாரை)

வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ......ஒ.....

(யாரை)

அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு
ஆ,,,,,,ஆ,,,,,,,,,,,

(யாரை)

28.4.06

உன்னக் கண்டு நானாட

படம் : கல்யாணப் பரிசு
குரல் : சுசீலா
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா
நடிகை : சரோஜாதேவி


பாடல்

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான காதல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

25.4.06

பாட வந்ததோ கானம்

படம்: இளமைக் காலங்கள்
பாடியவர்கள்: பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், சசிகலா


சுசீலா:
லா லா லா லல்ல லா
லலலா லலலா

குழுவினர்:
தாரத்தத்தத்த தாரத்தத்த
தரத்த தாரரா

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

குழுவினர்:
லா லாலா ....

ஜேசுதாஸ்:
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர் காலம்
நெஞ்சில் வெயில் காலம்

சுசீலா:
அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி
பண் பாடி கண் மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஜேசுதாஸ்:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லாலல் லாலா லாலா
லாலல் லால லா லாலா

குழுவினர்:
லா லா லா லா லா லா.....

சுசீலா:
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

ஜேசுதாஸ்:
தேனே தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள்
விரைந்தால் கடலும் வழி விடும்

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஜேசுதாஸ்:
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

குழுவினர்:
லால லால் லா லா லா
லால லலல்லாலா லா

சுசீலா: லால லலல்லாலா லா
லலலால் லாலாலா

23.4.06

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி


டி.எம்.எஸ்:
ம்ம்ம் ம்ஹ¤ம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று

டி.எம்.எஸ்:
ம்ஹ¤ம் காற்று இல்லே காத்து

சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து

சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

டி.எம்.எஸ்:
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

சுசீலா : ஓஓஓஓஓஓஓ

டி.எம்.எஸ்:
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக

சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக

இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு

டி.எம்.எஸ்:
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி

படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா


பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

(பூஞ்சிட்டு)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

அழகாம் கொடி சிறிது

திரைப் படம்: சத்தியம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடித்தவர்கள்: கமலஹாஸன், ஜெயசித்ரா

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
ஆதரிப்போர் இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா: தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்து நீரூற்றி
உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்துஆதரிப்போர்
இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ

சுசீலா:
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

22.4.06

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.


http://ww.smashits.com/redirect.cfm?ID=11&TrackID=29206

ஆண்:
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

பெண்:
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண்:
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்
தேவதை போலே நீயாட

பெண்:
பூவாடை வரும் மேனியிலே உன்
புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:
கைவளையும் மைவிழியும்
கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்:
ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை
பாத பூசை செய்து வர

பெண்:
ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்
உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:
மல்லிகைக் காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:

வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த
வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)

ஆண்:
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

பெண்:
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

12.4.06

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்...

படம் - கிளிஞ்சல்கள்
வரிகள் -
இசை -
பாடியவர்கள் -

பாடல் ஒலி வடிவில் - http://www.dishant.com/jukebox/playsong.php3?albumid=3562&songid=24441

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You

July i love You

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..


July i love You

July i love You

13.3.06

கண்ணில் என்ன கார்காலம்

படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் - வைரமுத்து
இசை - இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி


பாடல் ஒலி வடிவில் - http://ww.smashits.com/index.cfm?Page=Audio&SubPage=STFListen&TrackID=25317

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...

23.2.06

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்...

படம் : சிகரம்

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உயிரை மேவிடும் உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சதை கலை மறந்தாலும்
கண்கள் இன்றிமைப்பது மறந்தாலும்
நற்றவர் தவ உள்ளிருந்தோம்பும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே

16.2.06

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

படம் - பாபு

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

13.2.06

செண்பகமே செண்பகமே...

படம் - எங்க ஊரு பாட்டுக்காரன்

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

படம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடியவர் - Asha Bhosle


செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் ஏனோ பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போ நீ என்னத்தொட்டு
பேசப்போறே முன்னால

செண்பகமே செண்பகமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே


பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

உன்னடி தேடி நான் வருவேனே
உன் மடி பார்த்து நான் இருப்பேனே
ராஜாவே உன்னைத் தொட்டு
நானும் வாழ மாட்டேனா
என் வீட்டுக்காரர் பாட்டும்
காதில் கேட்க மாட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

9.2.06

சின்னஞ்சிறுவயதில் எனக்கோர்...

படம் - மீண்டும் கோகிலா
பாடல் வரிகள் - கண்ணதாசன்
பாடியவர்கள் - K.J.ஜேசுதாஸ்+S.P.சைலஜா
வருடம் - 1980
நடித்தவர்கள் - கமலஹாசன்+சிறீதேவி




சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

பாடல் எனது பார்வையில்

6.2.06

முதல் முதலில் பார்த்தேன்

பாடியவர்கள் - சித்ரா+ஹரிகரன்
இசை - தேவா
படம் - ஆஹா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே


நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்

நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்

முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

எனை மறந்து எந்தன்
நிழல் போகுதே