படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: ஜேசுதாஸ்
எழுதியவர் - தெரியவில்லை
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....
மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!
அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!
சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!
அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!
10.12.04
8.12.04
நதி எங்கே வளையும்...?
உயிரோடு உயிராக படத்தில் இடம் பெற்ற பாடல்
நதி எங்கே வளையும்
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்குத் தெரியும்
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...
கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
இப்பாடல் எனது பார்வையில்
நதி எங்கே வளையும்
கரை இரண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்குத் தெரியும்
விரும்பி யாரும் பிறப்பதுமில்லை.
விரும்பிப் பாத்திரம் கிடைப்பதுமில்லை
முடிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோசமில்லை.
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயதில் ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழ்வதுமில்லை
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து...
கனவு காண்பது கண்களின் உரிமை
கனவு கலைவது காலத்தின் உரிமை
சிதைந்த கனவைச் சேர்த்துச் சேர்த்து
அரண்மனை கட்டுவது அவரவர் திறமை
ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
இப்பாடல் எனது பார்வையில்
7.12.04
தகிடததுமி தகிடததுமி தந்தானா
படம் - சலங்கை ஒலி
பாடியவர் - பாலசுப்ரமணியம்
இசை - இளையராஜா
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் ...
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.
இப்பாடல் எனது பார்வையில்
பாடியவர் - பாலசுப்ரமணியம்
இசை - இளையராஜா
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் ...
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.
இப்பாடல் எனது பார்வையில்
6.12.04
நலந்தானா நலந்தானா
படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
இப்பாடல் எனது பார்வையில்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று
கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................
நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா
இப்பாடல் எனது பார்வையில்
4.12.04
பாப்பா.. பாப்பா கதை கேளு
படம். எங்க பாப்பா
பாடியவர் ஏ.எல். ராகவன்
பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையிலே வெங்காய வடையிருக்கு
வடையை காக்கா திருடிச்சாம்
காக்கா மரத்திலை குந்திடிச்சாம்
காக்கா மூக்கிலை வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடிச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரி ஒரு தந்திரம் பண்ணிச்சாம்
காக்காப் பாட்டு பாடுண்ணு
குள்ளநரியுமே கேட்டிடுச்சாம்
வாயைத்திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்ததை நரியும் கவ்விடிச்சாம்
வாயிலை போட்டு தின்னுடிச்சாம்.
பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாடியவர் ஏ.எல். ராகவன்
பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஊருக்கு வெளியே கடையிருக்கு
கடையிலே வெங்காய வடையிருக்கு
வடையை காக்கா திருடிச்சாம்
காக்கா மரத்திலை குந்திடிச்சாம்
காக்கா மூக்கிலை வடையிருக்க
குள்ள நரியுமே பாத்திடிச்சாம்
லேசா வடையை வாங்கிடவே
நரி ஒரு தந்திரம் பண்ணிச்சாம்
காக்காப் பாட்டு பாடுண்ணு
குள்ளநரியுமே கேட்டிடுச்சாம்
வாயைத்திறந்து காக்கா பாட
வடையும் கீழே விழுந்திடுச்சாம்
விழுந்ததை நரியும் கவ்விடிச்சாம்
வாயிலை போட்டு தின்னுடிச்சாம்.
பாப்பா.. பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
பாட்டா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
Subscribe to:
Posts (Atom)