16.7.06

நான் முதல் முதல் பாடிய பாட்டு

படம் : தாய் நாடு
குரல் : T.M.S+P.சுசீலா
பாடல் : ஆபாவாணன்
இசை : மனோஜ்-கியான்
நடிகர்கள் : சத்யராஜ், ராதிகா


நான் முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரல் கேட்டு
இரவில் வந்ததால் இருண்டு போனதால்
இருண்ட வாழ்வும் இனி மாறும்

( நான் )

போராடும் நெஞ்சங்கள் சோர்வாகக் கூடாதம்மா
போராடிப் பாராமல் துன்பங்கள் தீராதம்மா
கேள்விகள் விடை பெற வேண்டும் - அந்த
விடைகளில் புதுயுகம் தோன்றும்
கேட்க மறந்த மனிதா - உன்
ஊமை வாழ்வும் இனிதா
அழுதவன் சிரித்திட வேண்டும் - அந்த
சிரிப்பினில் தத்துவம் தோன்றும்
சிரிக்க மறந்த மனிதா - நீ
சுமக்கும் பாரம் பெரிதா
தாங்காது இனி தாங்காது
புது போராட்டம் காண

நீ முதல் முதல் பாடிய பாட்டு - இங்கு
ஏழையின் அழுகுரம் கேட்டு
இரவில் வந்ததால்.. இருண்டு போனதால்...


கனவுகள் உயிர் பெறவேண்டும் - அது
உயிர் பெற போரிட வேண்டும்
காலம் மீண்டும் வருமா - அது
கனவை மீட்டுத் தருமா
சிறைகளும் உடை பட வேண்டும் - அதை
உடைத்திடத் துணிவுகள் வேண்டும்
துணையும் மீண்டும் வருமா - அது
துணிவை மீட்டுத் தருமா
போதாது இது போதாது
நீ போராட ஓடி வா

( நான் )

No comments: