1.5.06

காகித ஓடம் கடல் அலை மீது

படம் : மறக்க முடியுமா ?
குரல் : சுசீலா
பாடல் : மு.கருணா நிதி
இசை : ராமமூர்த்தி


காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

(காகித)

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

(காகித)

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

(காகித)

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

படம் : ராஜா
குரல் : TMS, சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

ஓ...ராஜா.....
ராஜா !

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா ?
காதல் கவிதை சொல்லு ராஜா...

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னைப் பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு

( நீ )

கொஞ்ச நேரம் என்னைத் தாலாட்டு
கொஞ்சும் போதும் என்னைப் பாராட்டு
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்

காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

வைரம் என்றே எனை நீ பாடு
வாங்கிக் கொள்வேன் அதைக் கையோடு
தந்தது பிறருக்குத் தெரியாது
சந்தித்த ரகசியம் புரியாது

நாளையும் மனம் உன்னைத் தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

பிள்ளைக்குத் தந்தை ஒருவன்

படம் : பார்த்தால் பசிதீரும்
பாடியவர் : TMS


பிள்ளைக்குத் தந்தை ஒருவன் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
(2)
நீ ஒருவனை நம்பி வந்தாயோ -இல்லை
இறைவனை நம்பி வந்தாயோ
(2)

தாயாரைத் தந்தை மறந்தாலும் -தந்தை
தானென்று சொல்லாத போதும்
(2)
தானென்று சொல்லாத போதும்

ஏனென்று கேட்காமல் வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்.
(பிள்ளைக்கு...)

உள்ளோருக்கு செல்வங்கள் சொந்தம் -அது
இல்லாருக்கு உள்ளங்கள் சொந்தம்
(2)
இல்லாருக்கு உள்ளங்கள் சொந்தம்

இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்
(பிள்ளைக்கு...)