30.4.06

கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்

படம் : மீண்ட சொர்க்கம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : டி.சலபதி ராவ்
நடிகை : பத்மினி


கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.

(கலையே)

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

படம் : பறக்கும் பாவை
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சரோஜாதேவி


யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

(யாரை)

வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ......ஒ.....

(யாரை)

அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு
ஆ,,,,,,ஆ,,,,,,,,,,,

(யாரை)

28.4.06

உன்னக் கண்டு நானாட

படம் : கல்யாணப் பரிசு
குரல் : சுசீலா
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா
நடிகை : சரோஜாதேவி


பாடல்

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான காதல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

25.4.06

பாட வந்ததோ கானம்

படம்: இளமைக் காலங்கள்
பாடியவர்கள்: பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், சசிகலா


சுசீலா:
லா லா லா லல்ல லா
லலலா லலலா

குழுவினர்:
தாரத்தத்தத்த தாரத்தத்த
தரத்த தாரரா

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

குழுவினர்:
லா லாலா ....

ஜேசுதாஸ்:
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர் காலம்
நெஞ்சில் வெயில் காலம்

சுசீலா:
அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி
பண் பாடி கண் மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஜேசுதாஸ்:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லாலல் லாலா லாலா
லாலல் லால லா லாலா

குழுவினர்:
லா லா லா லா லா லா.....

சுசீலா:
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

ஜேசுதாஸ்:
தேனே தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள்
விரைந்தால் கடலும் வழி விடும்

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஜேசுதாஸ்:
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

குழுவினர்:
லால லால் லா லா லா
லால லலல்லாலா லா

சுசீலா: லால லலல்லாலா லா
லலலால் லாலாலா

23.4.06

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி


டி.எம்.எஸ்:
ம்ம்ம் ம்ஹ¤ம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று

டி.எம்.எஸ்:
ம்ஹ¤ம் காற்று இல்லே காத்து

சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து

சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

டி.எம்.எஸ்:
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

சுசீலா : ஓஓஓஓஓஓஓ

டி.எம்.எஸ்:
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக

சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக

இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு

டி.எம்.எஸ்:
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி

படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா


பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

(பூஞ்சிட்டு)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

அழகாம் கொடி சிறிது

திரைப் படம்: சத்தியம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடித்தவர்கள்: கமலஹாஸன், ஜெயசித்ரா

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
ஆதரிப்போர் இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா: தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்து நீரூற்றி
உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்துஆதரிப்போர்
இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ

சுசீலா:
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

22.4.06

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.


http://ww.smashits.com/redirect.cfm?ID=11&TrackID=29206

ஆண்:
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

பெண்:
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண்:
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்
தேவதை போலே நீயாட

பெண்:
பூவாடை வரும் மேனியிலே உன்
புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:
கைவளையும் மைவிழியும்
கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்:
ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை
பாத பூசை செய்து வர

பெண்:
ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்
உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:
மல்லிகைக் காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:

வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த
வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)

ஆண்:
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

பெண்:
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

12.4.06

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்...

படம் - கிளிஞ்சல்கள்
வரிகள் -
இசை -
பாடியவர்கள் -

பாடல் ஒலி வடிவில் - http://www.dishant.com/jukebox/playsong.php3?albumid=3562&songid=24441

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You

July i love You

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..


July i love You

July i love You