4.8.09

மண்ணுக்கு மரம் பாரமா

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958

மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே

கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?

அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: T.R.பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: P.லீலா


ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே

நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி
வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு
சேரக் கூடாது - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே