7.8.09

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இயற்றியவர் - கண்ணதாசன்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே


பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே


மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

படம் :தாய் மூகாம்பிகை
குரல் :இளையராஜா
இசை :இளையராஜா

சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ


ஆ...ஆ.....

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (3)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..


ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. (2)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட வாகத்திலே.. (2)
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3)


ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்.. (2)
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே.. (2)
அலை மாமகளே கலை மாமகளே.. (3)


ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..


ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. (2)
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ (4)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (2)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசன்
டி.ஆர். மஹாலிங்கம்
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்


காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்