1.5.06

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்

படம் : ராஜா
குரல் : TMS, சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, ஜெயலலிதா

ஓ...ராஜா.....
ராஜா !

நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்
வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்
காலம் கடந்தால் என்ன ராஜா ?
காதல் கவிதை சொல்லு ராஜா...

நீ வருவாய் என நான் காத்திருந்தேன்
வரும் வழி தோறும் உன்னைப் பார்த்திருந்தேன்
காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
காக்க வைப்பதில் சுகம் உண்டு

( நீ )

கொஞ்ச நேரம் என்னைத் தாலாட்டு
கொஞ்சும் போதும் என்னைப் பாராட்டு
இன்பத்தை இருவரும் கொண்டு வருவோம்
கொள்ளையில் இருவரும் பங்கு பெறுவோம்

காதலை இணைத்தது ஜாதகமே
காலமும் நமக்கினி சாதகமே
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

வைரம் என்றே எனை நீ பாடு
வாங்கிக் கொள்வேன் அதைக் கையோடு
தந்தது பிறருக்குத் தெரியாது
சந்தித்த ரகசியம் புரியாது

நாளையும் மனம் உன்னைத் தேடி வரும்
நான் தரும் ஆனந்தம் கோடி பெறும்
உன் மனமும் குணமும் நாடகம்
உன் மடியினில் நான் ஒரு குழந்தை குழந்தை..

( நீ )

No comments: