13.3.06

கண்ணில் என்ன கார்காலம்

படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் - வைரமுத்து
இசை - இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி


பாடல் ஒலி வடிவில் - http://ww.smashits.com/index.cfm?Page=Audio&SubPage=STFListen&TrackID=25317

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...