திரைப் படம்: காஞ்சி தலைவன்
பாடியவர்கள்: T.M..சௌந்தரராஜன்+பீ. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: ஆலங்குடி சோமு
டி.எம். எஸ்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
சுசீலா:
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா
கருமணியின் துயரம்
கண்டு இமைகள் தூங்குமா
அண்ணன் கண்ணீரில் மிதந்திட
என் இதயம் தாங்குமா
டி.எம். எஸ்:
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
வரும் புயலை எதிர்த்து
நின்று சிரிக்கின்றேனம்மா
தங்கை வாழ்வுக்காக
என் சுகத்தைக் கொடுக்கின்றேனம்மா
சுசீலா:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
அண்ணன் தங்கை உறவு முறை
மலர்ந்ததம்மா... மலர்ந்ததம்மா
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா
சுசீலா:
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
பிறவி என்னும் பாதையிலே
உன்னுடன் வந்தேன்
அந்த பயணத்திலே கடமை செய்யும்
துணிவை அடைந்தேன்
டி.எம். எஸ்:
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
சிறகடிக்கும் ஆசைகளை
சிறையில் பூட்டுவேன்
நீ சிரித்திருக்கும் காட்சியிலே
மனதைத் தேற்றுவேன்
சுசீலா:
ஒரு கொடியில்
டி.எம். எஸ்:
இரு மலர்கள்
சுசீலா:
பிறந்ததம்மா.. பிறந்ததம்மா
டி.எம். எஸ்:
அண்ணன் தங்கை
சுசீலா: உறவு முறை
டி.எம். எஸ்:
மலர்ந்ததம்மா.. மலர்ந்ததம்மா
இருவரும்:
ஒரு கொடியில் இரு மலர்கள்
பிறந்ததம்மா... பிறந்ததம்மா