15.5.06

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா

படம்: நீங்காத நினைவு
பாடியவர்: பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடிப்பு: விஜயகுமாரி

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
அன்பு உண்மையாயிருந்தால் உன்னை அழைக்கும்
இன்பமே வாழ்விலே தந்திடும்

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
பூவுமில்லை பொட்டுமில்லை புன்னகையில்லை
நீ இல்லாத உலகத்திலே சிங்காரமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வாழ்வுமில்லை வளமுமில்லை சந்தோஷமில்லை
வருவதே நிம்மதி இல்லையே

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா ஆ ஆ

No comments: