11.5.06

அலை பாயுதே கண்ணா...

படம் - அலைபாயுதே
இயற்றியவர் : ஊத்தக்காடு வேங்கடசுப்பையர்
இராகம் : கானடா
தாளம் : ஆதி


பல்லவி:
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

அனுபல்லவி:
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

சரணம்:
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

நிலவு வந்து பாடுமோ

படம்: இராமன் எத்தனை இராமனடி
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: கே.ஆர்.விஜயா


நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்

மாறட்டும்
மனது போல போகட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்

தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ

வாழட்டும்
வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்

அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ

போகட்டும்
புதிய சுகம் காணட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்

ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ

முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ