திரைப் படம்: மீண்ட சொர்க்கம்
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி
http://www.raaga.com/getclip.asp?id=999999026780
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
எங்கே?
ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
எங்கே?
ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்
ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
நானா?
ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்
ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
யாரோ?
ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்
ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்
சுசீலா:
ஓஹோ..
ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்