24.10.08

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

இது ஒரு ராகமாலிகை.



ராகம்: சிவரஞ்சனி
தாளம்: ஆதி
இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி


பல்லவி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா


குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா


சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்-4

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா

யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

21.10.08

என் உள்ளில் எங்கோ

படம்: ரோசாப்பூ ரவிக்கைகாரி
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இளையராஜா


என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?

என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க - பங்குவைக்க
பொங்கிடும் பூம்புனலில் .... ஆ... ஆ... ஆ... ஆ.......
பொங்கிடும் அன்பெனும் பூம்புனலின்
போதையி லே மனம் பொங்கி நிற்க தங்கிநிற்க
காலம் இன்றே தீராதோ?

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ?

மஞ்சளைப் பூசிய மேகங்களே மேகங்களே- மோகங்களே
மல்லிகை மாலைகளே ஆ... ஆ... ஆ...
மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழிமாதத்துக் காலைகளே சோலைகளே
என்றும் என்னைக் கூடாயோ?

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ? ஏன் வாட்டுது?
ஆனால் அதுவும் ஆனந்தம்...

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

காவியமா நெஞ்சின் ஓவியமா

படம் : பாவை விளக்கு
குரல் : சிதம்பரம் ஜெயராமன், சுசீலா
பாடல் : மருதகாசி
இசை : கே.வி.எம்.
நடிகர்கள் : சிவாஜி, எம்.என்.ராஜம்


காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....


காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....

முகலாய சாம்ராஜ்ய தீபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமெ
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே

மும்தாஜ்ஜே... ஏ..ஏ..
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
மும்தாஜ்ஜே முத்தே என் பேகமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே
பேசும் முழு மதியே என் இதய கீதமே

என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம் கொண்ட தெய்வமெ
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே அழகின் சிகரமே
ஆசை வடிவமே உலகின் அதிசயமே

காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....

என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
என்னாளும் அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே...
கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
கனியில் ஊறிடும் சுவையை மீறிடும்
இனிமை தருவதுண்மை காதலே
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
காலம் மாறினும் தேகம் அழியினும்
கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்

காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....

20.10.08

என் கண்மணி உன் காதலி

படம்: சிட்டு குருவி
பாடல்: என் கண்மணி
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன், பி. சுசீலா
இசை: இளையராஜா

ஆண்: என் கண்மணி.. உன் காதலி.. இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பயணி: நன்னா சொன்னேள் போங்கோ..

பெண்: என் மன்னவன்.. உன் காதலன்
எனை பர்த்ததும்.. ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி

ஆண்: இரு மான்கள் பேசும் போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்க்கும் வழி ஏதம்மா

பெண்: ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்

ஆண்: இளமாமயில்..

பெண்: அருகாமையில்..

ஆண்: வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று,
அனுபவம் சொல்லவில்லையோ

கண்டக்டர்: இந்தாம்மா கருவாட்டு கூடை முன்னாடி போ

பெண்: என் மன்னவன்..உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம்
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

ஆண்: என் கண்மணி..

கண்டக்டர்: தேனாம்பேட்டை சூப்பர்மாக்கெட் எறங்கு..

ஆண்: மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே

பெண்: அதற்காக நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் அன்று தரவேண்டுமே

ஆண்: இரு தோளிலும்.. மண்மாலைகள்

பெண்: கொண்டாடும் காலம் என்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

ஆண்: என் கண்மணி, உன் காதலி, இளமாங்கனி,
உனைபார்ததும் சிரிக்கின்றதே..சிறிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

பெண்: என் மன்னவன், உன் காதலன்
எனை பர்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான்..
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூன்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ
ஆண்: என் கண்மணி

என் கண்மணி.. உன் காதலி
இள மாங்கனி...எனைப் பார்த்ததும்..
சிரிக்கின்றதே.. சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ

..... நன்னா சொன்னேள் போங்கோ..

என் மன்னவன்.. உன் காதலன்
எனைப் பார்த்ததும்..ஓராயிரம்..
கதை சொல்கிறான்.. கதை சொல்கிறான்
அம்மம்மா.. இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ

(என் கண்மணி)

இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில்.. அருகாமையில்
வந்தாடும் காலம் என்று கூடும் என்று
அனுபவம் சொல்வதில்லையோ..

... இந்தம்மா கருவாட்டுக் கூடை.. முன்னாடி போ..

(என் மன்னவன்)

.. தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு...

மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் பட வேண்டுமே
அதற்காக நேரம் ஒன்று வர வேண்டுமே
அடையாளச் சின்னம் ஒன்று தர வேண்டுமே
இரு தோளிலும் மண மாலைகள்
வந்தாடும் நேரம் என்று கூடும் என்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

(என் கண்மணி)

உறவுகள் தொடர்கதை

படம்: அவள் அப்படித்தான்.
இசை: இளையராஜா.
குரல்: கே.ஜே.யேசுதாஸ்.


உறவுகள் தொடர்கதை...

உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே...

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர்கதை...
உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... (இசை)


வாழ்வென்பதோ கீதம்..
வளர்கின்றதோ நாணம்..
நாள் ஒன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்

நதியிலே புதுப் புனல்..

கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது

இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே..
இனியெல்லாம் சுகமே..

29.9.08

உள்ளமெல்லாம் தள்ளாடுதே

படம் : தூரத்து இடி முழக்கம்.
பாடியவர்கள் : ஜேசுதாஸ் & ஜானதி.


உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


அன்புமொழி பேசி என்னாசைவலை வீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கைதாவுதே

வாய்மொழி சொன்னால் வாழ்வும் ஆரம்பமா?
வண்டுவந்து தீண்டாமல் பூவாகுமா?
கொண்ட ஆசைகள் கைகூடுமா?
எல்லையில்லா இன்பங்கள் கொண்டாடுமா?
எண்ணும் யோகங்கள் உண்டாகுமா?

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


அன்புமொழி பேசி என்னாசைவலை வீசி
கன்னிமீனை அள்ளிக்கொள்ள கைதாவுதே

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

ஆண்மனம் வைத்தால் அஞ்சி பின்வாங்குமா?
நம்பியுள்ள நெஞ்சங்கள் ஏமாறுமா?
எந்தன் சொந்தங்கள் வீணாகுமா?
தாலியென்ற வேலிகட்டி காப்பாற்றுவேன்
தங்கம் போலுன்னை பாராட்டுவேன்!

உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ
எண்ணங்கள் போராடுதே


துள்ளும் அலைதொட்டு
என் காலை முத்தமிட்டு
வெள்ளிநிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே

27.5.08

வாசமில்லா மலரிது

படம்: ஒரு தலை ராகம்
இசை: T .ராஜேந்தர்
பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்


வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ
வசந்தத்தைத் தேடுது
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

5.4.08

தீயில் விழுந்த தேனா?

படம் : GOD FATHER
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்


தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?

(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

(தீயில்)

11.3.08

கண்களால் நான் வரைந்தேன்

படம்: மங்கள நாயகி
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா
இசை: வி.குமார்


ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

மார்கழி மாதம் என்றால்
ஆஆஆஆஆஆ ..
மார்கழி மாதம் என்றால்
போர்வை போல் நானிருக்க
சித்திரை மாதம் என்றால்
வாடை போல் நீயிருக்க
நான் சூடும் மாலைகள் நீ கொண்ட கைகள்
நெய் கொண்ட தீபங்கள் மை கொண்ட கண்கள்
பூவும் பொட்டும் மேவும் பெண்மை
பூவைப் போலே நாளும் மென்மை

கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

உன் நலம் நினைப்பதெல்லாம் என் நலம் நானறியேன்
உன்னை நான் வாழ வைக்க என்னையே நான் கொடுப்பேன்
சொந்தங்கள் பந்தங்கள் உண்டான பின்பு
மென்மேலும் வளர்கின்ற நிலவாகும் அன்பு
உன்னைப் பாடும் எந்தன் உள்ளம்
என்றும் பொங்கும் கங்கை வெள்ளம்

சுசீலா:
கண்களால் நான் வரைந்தேன்
அன்பெனும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

காலங்கள் கனியும் வரை கன்னி நான் காத்திருப்பேன்
கண்னனின் வரவுக்கென்றே கண் மலர் பூத்திருப்பேன்
கல்யாண வைபோகம் ஊர்கோலம் யாவும்
நன் நாளில் உன்னோடு நான் காண வேண்டும்
எண்ணம் எல்லாம் கண்ணில் மின்ன
சொல்லில் சொல்ல மிச்சம் என்ன

ஜேசுதாஸ்:
கண்களால் நான் வரைதேண்
அன்பெனும் ஓர் கவிதை
சுசீலா: தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை

என்ன பார்வை உந்தன் பார்வை

படம் : காதலிக்க நேரமில்லை
குரல் : ஜேசுதாஸ், சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வி.ரா
நடிகர்கள் : முத்துராமன், காஞ்சனா


என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை
மெல்ல மெல்ல பக்கம் வந்து
தொட்ட சுகம் அம்மம்மா....ஆ..


என்ன பார்வை உந்தன் பார்வை
எனை மறந்தேன் இந்த வேளை
வண்ண வண்ணச் சேலை தொட்டுக்
கண்ட சுகம் அம்மம்மா....ஆ...

தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா
சின்னச் சின்ன நெஞ்சில் உன்னை
எண்ண எண்ண அம்மம்மா... ஹோய்..

கன்னங்கள் என்னும் தங்கத் தட்டு
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ
சொல்லச் சொல்ல உள்ளம் துள்ளும்
இன்பம் என்ன சொல்லம்மா... ஹோய்

( என்ன )

மை கொண்ட கண்கள் மெல்ல மூடும்
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ
பிஞ்சுத் தென்றல் நெஞ்சைத் தொட்டுக்
கொஞ்சக் கொஞ்ச அம்மம்மா...ஹோ

ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்
ஏன் மிச்சம் கண்ணல்ல ஓடி வா
அக்கம்பக்கம் யாரும் இல்லை
வெட்கம் என்ன சொல்லம்மா.. ஹோ..

( என்ன )

10.2.08

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த

படம் : பாத காணிக்கை
குரல் : பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிகர்கள்: சாவித்திரி


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி

(எட்டடுக்கு)