22.4.06

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.


http://ww.smashits.com/redirect.cfm?ID=11&TrackID=29206

ஆண்:
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

பெண்:
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண்:
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்
தேவதை போலே நீயாட

பெண்:
பூவாடை வரும் மேனியிலே உன்
புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:
கைவளையும் மைவிழியும்
கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்:
ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை
பாத பூசை செய்து வர

பெண்:
ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்
உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:
மல்லிகைக் காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:

வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த
வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)

ஆண்:
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

பெண்:
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)