8.8.07

தேவதையைக் கண்டேன் காதலில்

படம் : காதல் கொண்டேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்தர்
வரிகள் : நா. முத்துக்குமார்


தேவதையைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன்
வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று
விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனித்தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்.

(தேவதையை)

தேவதை தேவதை தேவதை தேவதை
அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம்
அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால்
சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில்
தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப்
போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய்
சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன்
கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

ஒரு வண்ணத்துப்பூச்சி

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா

பாடல் : சங்கீத ஸ்வரங்கள்
படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி
குரல் : எஸ்.பி.பி
வரிகள் : புலமைப்பித்தன்

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித் தா

சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது

சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்

சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்

என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்

விழியும் விழியும் நெருங்கும் பொழுது

படம் : சதுரங்கம்
இசை : வித்தியாசாகர்
கவிதை : அறிவுமதி

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்

உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு...

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை
இன்றி கிள்ளும்

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்

இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு...