படம் : மீண்ட சொர்க்கம்
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : டி.சலபதி ராவ்
நடிகை : பத்மினி
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.
(கலையே)
மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.
(கலையே)
கோவில் கண்டேன்
அங்கு தெய்வமில்லை
ஓடி வந்தேன் இங்கே நீயிருந்தாய்
ராகமும் தாளமும் பாவமும் நீயே
நீயில்லையேல் நான் இல்லையே
ஆ....ஆ.....ஆ.ஆ.ஆ.ஆ.
(கலையே)
2 comments:
காலையும் நீயே... மாலையும் நீயே...பாடல் தாருங்களேன்.
நாகு
முயற்சிக்கிறேன்.
பாரதி
உங்கள் சாட்டில் நானும் அதைப் பதிந்து விட்டேன்.
Post a Comment