12.12.06

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே

படம்: எங்க வீட்டு மஹாலஷ்மி
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
இசை: மாஸ்டர் வேணு


சீர்காழி:
ம்ம் ம்ம் .. மூட்டையைக் கட்டிக்கோ

சுசீலா:
எதுக்கு?

சீர்காழி:
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

சுசீலா:
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுனாயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

சீர்காழி:
கெட்டவுங்க பட்டணத்தை
ஒட்டிக்கோணும் என்பதாலே
கெட்டவுங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும்
என்பதாலே
பட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும்
போவதாலே
கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

சுசீலா:
வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்
பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
ஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்
அஞ்சிக்கி ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
மிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்

சீர்காழி:
எப்படி?

சுசீலா:
ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
மாப்பிள்ளே ..ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே
எண்ணாம தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணாம போனா
பின்னாலே கேளு மாமா

சீர்காழி:
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு...
ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்
நைசா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்
ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேர்த்து உருகினா பீச்சுக்குப் போவேன்
மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்
ஆத்தச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

சுசீலா:
மேலே?

சீர்காழி:
இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி
பொம்பளே
இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி
நான் இப்போதே போவோணும்
உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும்
வாங்கி வாடி

சீர்காழி:
பட்டணம் தான் போகலாமடி பொம்பளே
பணம் காசு தேடலாமடி
நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்
வாடி பொண்டாட்டி தாயே

சுசீலா:
டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே
டவுன் ஆயிப் போயிடுவீங்க
அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்
வேண்டான்னா கேளு மாமா

சுசீலா:
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை
வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை
கணக்குக்கும் மீறி பணம் வந்த போது
மனுஷனை சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து
எல்லா வேலையும் செய்வே துணிந்து
இரவு ராணிகள் வலையிலே விழுந்து
ஏமாந்து போவே .. இன்னும் கேளு ...

சீர்காழி:
அப்புறம்?

சுசீலா:
போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே
புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா
பொண்ஜாதி பேச்சைக் கேளு

சீர்காழி:
அப்பிடியா? ஆஹா...
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி
நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
ஊரு விட்டு ஊரு போனா
சீரு கெட்டுப் போகுமின்னு
உண்மையோட சொன்ன சொல்லு
நன்மையாக தோணுது
பட்டணம் தான் போக மாட்டேண்டி
உன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி
நல்ல கட்டாணி முத்தே
என் கண்ணைத் தொறந்தவ நீ தான்
பொண்டாட்டி தாயே

சுசீலா:
மாமா...

சீர்காழி:
ஏம்மா?

சுசீலா:
என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு
என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு

சீர்காழி:
எங்கப்பனானே சத்தியம் ..
சத்தியம் .. சத்தியம் ..

இருவரும்:
ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்

ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே
நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி
நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு
நாம் உல்லாசமாக வாழ்வோம்