17.10.07

இது ஒரு பொன்மாலைப் பொழுது

'நிழல்கள்' - 1980
வரிகள் - வைரமுத்து
குரல் - பாலசுப்ரமணியம்


பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

தாலாட்டுதே வானம்

கடல் மீன்கள்(1981) - கமல்

தலைவன்:
தாலாட்டுதே!

தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

தாலாட்டுதே!

தலைவி:
அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

தலைவன்:
நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

தலைவி:
மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்!

தலைவன்:
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்!

தலைவி:
எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

தாலாட்டுதே!

(தாலாட்டுதே...)

தலைவி:
இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

தலைவன்:
ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

தலைவி:
சொர்க்கத்திலே இது முடிவானது!

தலைவன்:
சொர்க்கம் என்றே இது முடிவானது!

தலைவி:
காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

தாலாட்டுதே!

(தாலாட்டுதே...)

தாலாட்டுதே!

கல்யாண தேன் நிலா

படம்:மௌனம் சம்மதம்
பாட்டு:வாலி

நடிப்பு:மம்மூட்டி அமலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -
நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் ??
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

நெஞ்சம் எனும் ஊரினிலே

படம்: ஆறு
பாடியவர்: கோபிகா பூர்ணிமா


நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

வாழ்க்கை எனும் வீதியிலே!
மனசு எனும் தேரினிலே!
ஆசை எனும் போதையிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

நான் தனியாய் தனியாய் நடந்தேனே!
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே!
ஒரு நுரையாய் நுரையாய் உடைந்தேனே!
காதலாலே...

நெஞ்சம் எனும் ஊரினிலே!
காதல் எனும் தெருவினிலே!
கனவு எனும் வாசலிலே!
என்னை விட்டுவிட்டு போனாயே!

மயிலிறகே! மயிலிறகே!

படம்: AH AAH (BEST FRIEND)
பாடியது: Madhusri, Naresh Iyer


மயிலிறகே! மயிலிறகே!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!


உயிரை தொடர்ந்து வரும்
நீதானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து!
காதல்தான் கல் எழுத்து அன்பே!

மயிலிறகாய்! மயிலிறகாய்!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!


மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை!
மெதுவா...மெதுவா..மெதுவா...
இங்கு வைகையில் வைத்திடு கை!

பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்!
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனசிறையில்!

ஓர் இலக்கியம் நம் காதல்!
வான் உள்ள வரை வாழும் பாடல்!

மயிலிறகாய்! மயிலகாய்!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவாய்! மழை நிலவாய்!
விழியில் எல்லாம் உன் உலா...


உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து
காதல்தான் கல் எழுத்து அன்பே!

தமிழா! தமிழா! தமிழா!
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா?
அமிர்தாய்! அமிர்தாய்! அமிர்தாய்!
கவி ஆக்கிட நீ வருவாய்!

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்!
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்!
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா?

பால் விளக்கங்கள்! நீ கூறு!
ஊர் உறங்கட்டும்! உரைப்பேன் கேளு!

மயிலிறகே! மயிலிறகே!
வருடுகிறாய் மெல்ல!
மழை நிலவே! மழை நிலவே!
விழியில் எல்லாம் உன் உலா!

உயிரை தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து!
நான் போடும் கை எழுத்து அன்பே!
உலக மொழியில் வரும்
எல்லாமே நேர் எழுத்து!
காதல்தான் கல் எழுத்து அன்பே!
மயிலிறகாய்... மயிலிறகாய்
வருடுகிறாய்... மெல்ல

வருடுகிறாய்... மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!
வருடுகிறாய்....மெல்ல!
வருடுகிறாய் மெல்ல!

16.10.07

நானொரு சிந்து காவடிச்சிந்து

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : சித்ரா


நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து...)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து...)

பிடிக்கும் உனை பிடிக்கும்

படம் : ஆழ்வார் (2006)
இசை : சிறீகாந்த், தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : மதுஷ்ரி
நடிப்பு : அஜித்,அஸின்

பிடிக்கும் உனை பிடிக்கும்
அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்
ரொம்பப் பிடிக்கும்

(பிடிக்கும்)

அழகாய் இருப்பாய் எனக்குப் பிடிக்கும்
அழகான சிரிப்பை உலகுக்குப் பிடிக்கும்
அழகாய் அணைப்பாய் எனக்குப் பிடிக்கம்
அழகா உன் தமிழை உலகுக்குப் பிடிக்கும்

(பிடிக்கும்)

காபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்
காஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்
ரோஜாப்பூ போன்ற உன் தேகத்தைப் பிடிக்கும்
ரேஸ்காரைப் போன்ற உன் வேகத்தைப் பிடிக்கும்

தந்தம் போல் இருக்கும் உன் தோளைப் பிடிக்கும்
தங்கம் போல் மின்னிடம் உன் மார்பைப் பிடிக்கும்
உன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்
உன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்

சின்னப் பிள்ளை போன்ற உள்ளம் பிடிக்கும்
நீ கொஞ்சும் போது சொல்லும் பொய்கள் பிடிக்கும்
அன்றாட நீ செய்யும் இம்சைகள் பிடிக்கும்
அங்கங்கே நீ வைக்கும் இச்சுக்கள் பிடிக்கும்
கன்னத்தில் செய்யும் காயங்கள் பிடிக்கும்
காயங்கள் சொல்லிடும் வேதங்கள் பிடிக்கும்
அப்பப்போ நேரும் ஊடல்கள் பிடிக்கும்
ஊடல்கள் தீர்ந்ததும் கூடல்கள் பிடிக்கும்

(பிடிக்கும்)

சட்டென நனைந்தது நெஞ்சம்

படம் : கன்னத்தில் முத்தமிட்டால்
வரிகள் வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் :
நடிப்பு: மாதவன், சிம்ரன்

இந்த பாடல் குறுந்தகட்டிலோ, ஒலிப்பதிவு நாடாவிலோ வரவில்லை
சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரை ஆனது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்!

உடலுக்குள் மல்லிகை
த் தூல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல்
சுகமாய்ய்ய்ய்ய்ய்ய்
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்

என்று காத்துக் கிடந்தேன்
அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்

என்று இன்று தெளிந்தேன்
தாவி வந்து எனை அணைத்த போது எந்தன்

சல்லி வேர்கள் அறுந்தேன்
சாவின் எல்லை வரை சென்று மீண்டு இன்று

இரண்டு ஜென்மம் அடைந்தேன்

துடிக்கும் உதடு கொண்டு துடைத்தெடு

வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று

அச்சத்தை
துடிக்கும் உதடு கொண்டு துடைத்திடு

வெட்கத்தை
அணைப்பினாதிக்கத்தால் வெளியேற்று

அச்சத்தை
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு!

சட்டென நனைந்தது நெஞ்சம்!

1.10.07

உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது

படம் - கருப்புசாமி குத்தகைக்காரர்
பாடியவர் - BOMBAY JAYASHREE


உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது.. - ஏ
கண்ணிரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது...
ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது..
தப்பிச் செல்லக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது..
தேதித்தாள போல வீணே நாளும் தேயிற... - நான்
தேர்வுத்தாள கண்ணீரால ஏனோ எழுதுற.....
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..!
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்- நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சத்தாக்கினாய்...!
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்..!
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் -உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்...!

(உப்புக் கல்லு......)

மீசைவைத்த அன்னைபோலே உன்னைக்காண்கிறேன்..- நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே.....!
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்-உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே...!
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும்-உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே..!
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் -கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே...!

(உப்புக் கல்லு......)

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!

படம்: இந்திரா
பாடியவர்: ஹரினிபாடல் வரிகள்: வைரமுத்து

ஆ... ஆ... ஆ.... ஆ...

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!
காற்று வீசும் வெய்யில் காயும் காயும்
அதில் மாற்றம் ஏதும் இல்லையே!
ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும்
அந்த வாழ்த்து ஓயவில்லை!
என்றென்றும் வானில்!!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!


அதோ போகின்றது! ஆசை மேகம்!
மழையை கேட்டுக் கொள்ளுங்கள்!
இதோ கேட்கின்றது குயிலின் பாடல்!
இசையை கேட்டுக்கொள்ளுங்கள்!
இந்த பூமியே பூவனம்!
உங்கள் பூக்களை தேடுங்கள்!
இந்த வாழ்கையே சீதனம்!
உங்கள் தேவையை தேடுங்கள்!

நிலாக் காய்கிறது! நேரம் தேய்கிறது!
யாரும் ரசிக்கவில்லையே!
இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்!
தென்றல் போகின்றது! சோலை சிரிக்கின்றது!
யாரும் சுகிக்கவில்லையே!
சின்னக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்!

பூவே வாய் பேசும் போது

படம் : 12B
பாடல் பூவே வாய் பேசும் ..
இசை: Harris Jayaraj
பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi




பூவே வாய் பேசும் போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் பொழி கேட்டுக் கொண்டு

காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்

கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால்

நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும்

மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்

களித்திருப்பேன் அன்பே
(பூக்களை...)

காதலன் ஆணைக்குக்

காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்

பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில்

நான் சுற்றி திரிவேன்
(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய்

என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை
(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை...
என் நினைவு தோன்றினால்

துளி நீரை சிந்திடு
( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது

இன்று நீ சொன்னது

கண்ணால் பேசும் பெண்ணே

படம் : மொழி
பாடல் : கண்ணால் பேசும் பெண்ணே
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவைசெய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறுதவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா

எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி
(கண்ணால்)

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும்போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி
கண்ணில் கடல்கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏசோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry (4)
(கண்ணால்)

காற்றின்மொழி... ஒலியா? இசையா?

படம்- மொழி



காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?

காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி...

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

காற்றின்மொழி... ஒலியா? இசையா?
பூவின் மொழி... நிறமா? மணமா?
கடலின் மொழி... அலையா? நுரையா?
காதல் மொழி... விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை!
காற்றின்மொழி...