7.5.06

மேகத்தைத் தூது விட்டா

படம் : அச்சமில்லை அச்சமில்லை
குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா
பாடல் : வைரமுத்து
இசை : வி.எஸ். நரசிம்மன்
நடிகர்கள் : ராஜேஷ், சரிதா

சுசீலா :
மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?
எப்ப வந்து தரப்போற ?

ஓடுகிற தண்ணியிலே...
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ...?

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ

செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

மலேஷியா வாசுதேவன்:
அடி கிராமத்துக் கிளியே - என்
கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை புடிக்க வா மயிலே

சுசீலா :
கொடையுமில்ல படையுமில்ல
கூதலுக்கு ஆதரவா
தாவணிய நீ புழிய
தலை துவட்ட நான் வரவா ?

மலேஷியா வாசுதேவன்:
நீ நனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
அயித்த மகன் நான் புழிஞ்சா
அத்தனையும் தேன் வடியும்

சுசீலா :
ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

மலைத் தோட்டத்து குயிலு
இது உமக்காகப் பாடுதுங்க
ஆசையை நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க

மலேஷியா வாசுதேவன்:
அருவி போல அழுகிறேனே
அறிந்து கொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் தாளாதோ

சுசீலா :
வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ - ஒங்க
பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
பல்லு வெளக்கப் போறதெப்போ

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

3 comments:

Chandravathanaa said...

நன்றி சித்திரைச்செல்வன்.
சந்தோச உணர்வைத் தரக் கூடிய இனிமையான பாடல் இது.
தண்ணீர் தண்ணீர் படத்தை நான் பார்த்து 20 வருடங்களுக்கு மேலாகி விட்டன.
இந்தப் பாடலும் காட்சியும் இன்னும் மனதில் அழகாக இருக்கின்றன.

G.Ragavan said...

அருமையான பாடல் சந்திரவதனா. பி.சுசீலாவின் இனிய குரலும் இனிமையும்...ஆகா!

Chandravathanaa said...

உண்மைதான் ராகவன். மிகவும் இனிமையான பாடல்.