8.10.09

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

படம்: மன்மத லீலை
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
ஆண்டு: 1976

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே
காமனை வென்றாக வேண்டும்

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாபம்
அருகினில் இருந்தென்ன லாபம்?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன?
உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்

14.8.09

பூங்கொடி தான் பூத்ததம்மா

படம் - இதயம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்


பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன?
ஊமைக்குப் பாடலென்ன?
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

11.8.09

உன்னால் முடியும் தம்பி தம்பி

திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி தம்பி
இயற்றியவர்: பொன் மகாலிங்கம்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா


உன்னால் முடியும் தம்பி தம்பி

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து

தூங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து

தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம்

உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி - அட

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே

நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென ஓர் சரித்திரமே

எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும் - அட

உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்

சாரய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்

காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிற்பான்

குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா

கட்சிக் கொடி ஏறுது போடா
கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா

கட்சிக் கொடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல்

நம் நாடு திருந்தச் செய்யோணும்

உன்னால் முடியும் - அட

உன்னால் முடியும் - ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

கல்லூரி பள்ளி இல்லாத ஊரை

கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு

நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம்

படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவெனும் கோபுரம் அங்கே

நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு

ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு

ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல்

நாம் என்று உறவு கொள்ளணும்

க கஸ்ம தமத நிதநி
மமமமகஸ மமமம தம ததததநி நிதநிநிநிநி
ஸ்ஸ்ஸ் நிதநி தநித மதம
நிஸ்நி தஸ்நி தநித மஸக

உன்னால் முடியும் அட

உன்னால் முடியும் ஆஹா
உன்னால் முடியும் தம்பி தம்பி அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து

தூங்கி விழும் நாட்டை எழுப்பு - உன்
தோளை உயர்த்து

தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையயும் முடிக்கும்

இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

7.8.09

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இயற்றியவர் - கண்ணதாசன்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே


என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே


பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே நீ போராடு
நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே

உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே


மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

படம் :தாய் மூகாம்பிகை
குரல் :இளையராஜா
இசை :இளையராஜா

சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ


ஆ...ஆ.....

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (3)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..


ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..
சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. (2)
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..
நின்ற நாயகியே.. இட வாகத்திலே.. (2)
ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3)


ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..
ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்.. (2)
அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..
தொழும் பூங்கடலே.. மலை மாமகளே.. (2)
அலை மாமகளே கலை மாமகளே.. (3)


ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ..


ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..
பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. (2)
சக்தி பீடமும் நீ.. ..
சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ (4)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜகத் காரணி நீ.. பரிபூரணி நீ.. (2)
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..
ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..
ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே

மாலையிட்ட மங்கை
கவிஞர் கண்ணதாசன்
டி.ஆர். மஹாலிங்கம்
எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்


காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிர்க்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்

4.8.09

மண்ணுக்கு மரம் பாரமா

படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
இயற்றியவர்: சுரதா
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: எம்.எஸ். ராஜேஸ்வரி
ஆண்டு: 1958

மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே

கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?

அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?

மண்ணுக்கு மரம் பாரமா

மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா

பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: T.R.பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: P.லீலா


ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே

நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி
வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு
சேரக் கூடாது - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே

6.7.09

சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

படம்: சர்வம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: ஜாவேட் அலி + மதுஸ்ரீ


சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!


உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!


கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!


Ha.. Ha.. Ha..
Ha.. Ha.. Ha..

ஓ..
நதியே நீ எங்கே என்று
கரைகள் தேடக் கூடாதா!
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேடக் கூடாதா!


ஓ..
மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நொடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்


அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்


அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே நிலவின் கீழே
தீயின் கீழே கரைக்கு வெளியே இல்லையே
உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில்

உள்ள வழியே..

எனக்கே நான் சுமையாய் மாறி
என்னைச் சுமந்து வந்தேனே!
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னைத் தேடி வந்தேனே!

விழி நனைத்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் உன்னை எந்தன்
உயிர் ஒதுக்கி விடாது


உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஓர் பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே


சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
ஒரு இமையெங்கிலும் தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ!


உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!



9.6.09

கண் போன போக்கிலே கால் போகலாமா?

படம்: பணம் படைத்தவன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி


கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


பொய்யான சில பேர்க்குப் புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்

கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?


திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்

கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

31.5.09

நாளைப் பொழுது உந்தன்

படம்: பொற்சிலை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா

நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா

நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

15.5.09

புன்னகையில் கோடி பூங்கவிதை

புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண் நிலவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மாமலரோ
என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று
இனங்கான வடிவத்தை
பெண்ணென்று பார்த்த மனம்
பித்தாகி போனதம்மா

பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
பாவை இனங்களும் அது போல
நாம் பழகி பார்க்கையில் மதுபோலே

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

நீங்க நல்லா இருக்கோணும்

படம் - இதயக்கனி

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாடுங்கள்

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற
பாடுபட்டு சேர்த்த பொருளை
கொடுக்கும் போது இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை
பார்க்கும் போது இன்பம்
பேராசையால் வந்த துன்பம்
சுயநலத்தின் பிள்ளை
சுயநலமே இருக்கும் நெஞ்சில்
அமைதி என்றும் இல்லை

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

நதியை போல நாமும்
நடந்து பயன் தர வேண்டும்
கடலை போல விரிந்த
இதயம் இருந்திட வேண்டும்
வானம் போல பிறருக்காக
அழுதிட வேண்டும்
வாழும் வாழ்க்கை உலகில்
என்றும் விளங்கிட வேண்டும்

நீங்க நல்லா இருக்கோணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள ஏழைகளின்
வாழ்வு முன்னேற

ஏரிக்கரை ஓரத்திலே எட்டு

படம் - தாழம்பூ

ஏரிக்கரை ஓரத்திலே
எட்டு வேலி நிலமிருக்கு
எட்டு வேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்
வாழை வைத்தால் தோப்பாகும்
மஞ்சள் வைத்தால் பிஞ்சு விடும்
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்

(ஏரி)

தென்புறத்துச் சீமையிலே
தென் குமரிக் கடல் இருக்கு
குமரிக் கடல் மூழ்கி வந்தால்
கோடையிலே என்ன வரும்
சரம் சரமாய் முத்து வரும்
தனிப்பவளம் சேர்ந்து வரும்
குமரியுடன் கலந்து விட்டால்
குடும்பத்திலும் ஆசை வரும்

(ஏரி)

காலம் இன்று கனியும் என்று
கனவு கண்டு வந்து விட்டேன்
கண்ட கனா பலிக்காதோ
கதவு இன்று திறக்காதோ
நினைத்து விட்டால் நடக்காதோ
நெருங்கி விட்டால் பிறக்காதோ
மனத்தினிலே முடித்து விட்டால்
வழிக்கதவும் திறக்காதோ

(ஏரி)

பங்குனி மாதத்தில் ஓரிரவு

படம் - தாழம்பூ

பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கு தனியே தவித்தது பெண்ணழகு
பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கு தனியே தவித்தது பெண்ணழகு
பங்குனி மாதத்தில் ஓரிரவு

காதல் தலைவன் வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
காதல் தலைவன் வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
தூது விட்டாலும் பதில் இல்லையாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
வரும் மணியோசை தனை இடி என்றாள்
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
வரும் மணியோசை தனை இடி என்றாள்
மெல்லிய பனியை மழை என்றாள்
தன் மேனியையே வெறும் கூடென்றாள்

பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு

காலடி ஓசை கேட்டு விட்டாள்
அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்
காலடி ஓசை கேட்டு விட்டாள்
அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்
நாலடி நடந்தாள் முன்னாலே
அங்கு நடந்தது என்னவோ பின்னாலே

பங்குனி மாதத்தில் ஓரிரவு

தாழம் பூவின் நறு மணத்தில்

படம் - தாழம்பூ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்

பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
பண்பான உள்ளமும் துணிந்து விடும்
அது பருவத்தின் முன்னே கனிந்து விடும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
உண்மையும் சில நாள் மறைந்திருக்கும்
அது ஒரு நாள் வந்து பதில் அளிக்கும்

ஓஹோ ஓஓஓஓ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
ஓஹோ ..ஓஓஓஓஓ

தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும்தரம் இருக்கும்

கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடலென்ற மேனியில் அலையாடும்
உயிர் காதலின் மேடையில் உலகாடும்
கடமையும் காதலும் நிறைவேறும்
கடமையும் காதலும் நிறைவேறும்
அந்தக் காலமும் விரைவில் உருவாகும்

ஓஹோ..ஓஓஓஓ
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
தாழம் பூவின் நறு மணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்

தூவானம் இது தூவானம்

திரைப்படம் - தாழம்பூ

தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்டுச் சொட்டா உதிருது உதிருது
அது தாழ்வாரத்திலும் கீழ்வாரத்திலும்
தளதளவென வளருது


(தூவானம்)

பூவாடும் இளம் கூந்தலுக்குள்

புகுந்து புகுந்து ஓடுது
மேலாடைதனில் மழை விழுந்து
நனைந்து நனைந்து மூடுது
மானோடும் சிறுவிழியில்

இட்டமையும் கரைந்து ஓடுது
தேனோடும் இதழ் மீது வந்து
பனித்துளி போல் தேங்குது


(தூவானம்)

உட்காரச் சொல்லி நான் அழைக்கும்போது
ஓட்டம் என்ன முன்னாலே
என் பக்கா மனசை இந்த வெட்கமும் வந்து
பாய்ந்திழுக்குது பின்னாலே
தக்க நேரம் வந்து விட்டது
தையல் போடு கண்ணாலே
இந்த சரசமாடக் கூடாது
ஒருதாலி கட்டும் முன்னாலே


(தூவானம்)

எங்கே போய்விடும் காலம்

திரைப்படம் - தாழம்பூ

எங்கே போய்விடும் காலம்?
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தைத் திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்

உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்து
வருவதை வரட்டும் என்றிருப்போம்
கண்ணீர் எல்லாம் புன்னகையாகும்
கடமையின் வழியே நின்றிருப்போம்.

ஒரு சில பேர்கள் ஒரு சில நாட்கள்
உண்மையின் கண்களை மூடி வைப்பார்
பொறுத்தவர் எல்லாம் பொங்கி எழுந்தே
மூடிய கண்களை திறந்து வைப்பார்

கால்கள் இருக்க கைகள் இருக்க
கவலைகள் நம்மை என்ன செய்யும்?
உழைப்பது ஒன்றே செயல் எனக் கொண்டால்
நடப்பது நலமாய் நடந்துவிடும்

28.4.09

ஆடி வெள்ளி தேடி உன்னை

படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்


ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கி

பாடியவர்கள்: என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம்

சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப்
பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு - அதன்
பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழம் செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு
இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா

படம் - பாமா விஜயம்

ஏன்னா, நீங்க சமத்தா? இல்ல அசடா?
சமத்தா இருந்தாக் கொடுப்பேளாம்,

அசடா இருந்தா மறுப்பேளாம்,

ஏண்டி, புதுசாக் கேக்குறே என்னப் பாத்து

அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா? அவ
ஆத்துக்காரர் கொஞ்சுறத்தக் கேட்டேளா?

அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவைய வாங்கிக்கறா பட்டுப் பொடவைய வாங்கிக்கறா

அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி அவன்
சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்குறாண்டி - பட்டு

உங்களுக்குத்தான் வாழ்க்கைப்பட்டு

என்னத்தைக் கண்டா பட்டு
பட்டு கிட்டு பேரைச்சொல்ல

பொறந்திருக்கே ஒரு லட்டு
நாளுங்கிழமையும் போட்டுக்க ஒரு

நகை நட்டுண்டா நேக்கு
எட்டுக்கல்லு பேசரிபோட்டா

எடுப்பா இருக்கும் மூக்கு
சட்டியிலிருந்தா ஆப்பையிலே வரும்

தெரியாதோடி நோக்கு
எப்போ இருந்தது இப்போ வரதுக்கு

எதுக்கெடுத்தாலும் சாக்கு
ஹுக்கும்

ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
பேசினா என்ன வெப்பேளோ ஒரு குட்டு
ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு

என்னத்த செய்வேள் - ஹாங்

சொன்னதச் செய்வேன்
வேறென்ன செய்வேள் -

அடக்கி வப்பேன்
அதுக்கும் மேலே -

ஆங் பல்ல உடப்பேன்

அடுத்தாத்து அம்புஜத்தெப் பாத்தேளா

மதுரை அரசாளும் மீனாட்சி

படம்: திருமலை தென்குமரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், LR.ஈஸ்வரி, விஜயா
ராகம்: காபி


மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவள் அல்லால் ஏது கதி?
(மதுரை அரசாளும் மீனாட்சி)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே
(மதுரை அரசாளும் மீனாட்சி)

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
(மதுரை அரசாளும் மீனாட்சி)

....காபி ராக ஆலாபனை...
(மதுரை அரசாளும் மீனாட்சி)

19.4.09

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்

படம்: நான் கடவுள்
பாடியவர் - மது கிருஷ்ணன்

பாடல் வரிகள் - இளையராஜா

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
யாம் ஒரு பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம் ஏந்தி
வந்தேன் அய்யனே என் அய்யனே

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா
இன்மையை நானறியாததா
சிறு பொம்மையின் நிலையினில்
உண்மையை உணர்ந்திட

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்
அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒரு முறையா இரு முறையா பல முறை
பலப் பிறப்பெடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா கணம் கணம்
தினம் தினம் என்னை துடிக்க வைத்தாய்

பொருளுக்கு அலைந்திடும்
பொருளற்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று
அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர்ப் பாதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே
பிண்டம் என்னும் எலும்போடு சதை நரம்பு உதிரமும்
அடங்கிய உடம்பு எனும் பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன் அய்யனே என் அய்யனே

கல்லை மட்டும் கண்டால்

படம்: தசாவதாரம்

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

எட்டில் ஐந்து எண் கழியும் என்றும்
ஐந்தில் எட்டு எண் அறியாது

அஷ்ட அட்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச அட்சரம் பார்க்காது

ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்தபோதும் எங்கள் தில்லை மாறாது

வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது

இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன்தான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்

(கல்லை மட்டும் கண்டால்)

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது

வீசும் காற்று வந்து விளக்கை அணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

சைவம் என்று பார்த்தால தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது

இசைத்தமிழ் நீ செய்த

படம்: திருவிளையாடல்
பாடியவர்: T. R. மகாலிங்கம்

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை..

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..
வசைவருமே பாண்டி நாட்டினிலே..
இறைவா...
வசைவருமே பாண்டி நாட்டினிலே..
குழலி மணவாளனே உனது வீட்டினிலே..
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே

வெற்றி ஒருவனுக்கோ
மதுரை தமிழனுக்கோ..?

இசைத்தமிழ் நீ செய்த..

சிவலிங்கம் சாட்சி சொன்னக்
கதையும் பொய்யோ..!
மாமன் திருச்சபை வழக்குரைத்த
முறையும் பொய்யோ..!

பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பட்ட உன்னை..

பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன..?

தாய்க்கொரு பழி நேர்ந்தால்
மகற்கில்லையோ.. அன்னை
தமிழுக்கு பழி நேர்ந்தால்
உனக்கில்லையோ..
வேருக்கு நீரூற்றி
விளைக்கின்ற தலைவா...
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை

தோல்வி நிலையென நினைத்தால்

படம்: ஊமை விழிகள்
பாடல்: தோல்வி நிலையென நினைத்தால்


தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...

வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...


விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

விடியலுக்கில்லை தூரம் ...
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ..

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உண்ர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா...

யுத்தங்கள் தோன்றட்டும் ..
இரத்தங்கள் சிந்தட்டும் ..
பாதை மாறலாமா..
ரத்தத்தின் வெப்பத்தில்
அச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா..

தோல்வி நிலையென நினைத்தால்..
மனிதன் வாழ்வை நினைக்கலாமா...
வாழ்வை சுமையென நினைத்து..
தாயின் கனவை மிதிக்கலாமா...

உரிமை இழந்தோம் ..
உடமையும் இழந்தோம்.
உணர்வை இழக்கலாமா...
உணர்வை கொடுத்து
உயிராய் வளர்த்த ..
கனவை மறக்கலாமா...

10.4.09

கதாநாயகன் கதை சொன்னான்

திரைப்படம் - வேட்டைக்காரன்

கதாநாயகன் கதை சொன்னான்
அந்தக்கண்ணுக்குள்ளும் இந்தப் பெண்ணுக்குள்ளும்
ஒரு (கதா)
கதாநாயகி கதை சொன்னாள்
அந்தக்கண்ணுக்குள்ளும் இந்த நெஞ்சுக்குள்ளும் ஒரு
(கதா)

காவிரிக்கரைக்கு வரச்சொன்னான்
இளங்கன்னத்தில் ஒன்று தரச்சொன்னான்
கையுடன் கைகளைச் சேர்த்துக் கொண்டான்
என்னைக்கட்டிக்கொண்டான் நெஞ்சில் ஒட்டிக்கொண்டான்

அங்கயற்கண்ணி தேசத்திலே
அழகிய வைகை ஓரத்திலே
பொங்கும் காதல் வேகத்திலே
எனைப்பூட்டிக்கொண்டான் கொடி நாட்டிக் கொண்டான்
(கதா)

குற்றால மலையின் சாரலிலே
கொஞ்சும் கிளிமொழிச் சோலையிலே
முற்றாத கனியென்னைத் தேடிக்கொண்டான்
மெல்லமூடிக்கொண்டான் இசை பாடிக்கொண்டான்

மாமல்லபுரத்துக் கடல் அருகே
இந்தமங்கை இருந்தாள் என்னருகே
பார்த்துக் கொண்டிருந்தது வான்நிலவு
நாங்கள்படித்துக் கொண்டிருந்தோம் தேன்நிலவு
(கதா)

வெள்ளி நிலா முற்றத்திலே

திரைப்படம் - வேட்டைக்காரன்

வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய


முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய


நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே