16.10.07

நானொரு சிந்து காவடிச்சிந்து

படம் : சிந்து பைரவி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
குரல் : சித்ரா


நானொரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்லை
உள்ள சோகம் தெரியவில்லை
தந்தையிருந்தும் தாயுமிருந்தும்

சொந்தமெதுவுமில்லை
அதச் சொல்லத்தெரியவில்லை

(நானொரு சிந்து...)

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ
நாடோடிப் பாட்டுக்குத் தாய்தந்தை யாரோ
விதியோட நான் ஆடும் விளையாட்டைப் பாரு
விளையாத காட்டுக்கு விதை போட்டதாரு
பாட்டுப் படிச்சா சங்கதி உண்டு
என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு
கண்டுபிடி........

(நானொரு சிந்து...)

பெண்கன்று பசு தேடிப் பார்க்கின்ற வேளை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே
தலையெழுத்தென்ன? என் மொதலெழுத்தென்ன
சொல்லுங்களேன்...

(நானொரு சிந்து...)

No comments: