1.10.07

பூவே வாய் பேசும் போது

படம் : 12B
பாடல் பூவே வாய் பேசும் ..
இசை: Harris Jayaraj
பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi




பூவே வாய் பேசும் போது
காற்றே ஓடாதே நில்லு
பூவின் பொழி கேட்டுக் கொண்டு

காற்றே நல் வார்த்தை சொல்லு
குளிர் வார்த்தை சொன்னால்

கொடியோடு வாழ்வேன்
என்னைத் தாண்டிப் போனால்

நான் வீழுவேன்
மண்ணில் வீழ்ந்த பின்னும்

மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே
புன்னகை புரிந்தால்

களித்திருப்பேன் அன்பே
(பூக்களை...)

காதலன் ஆணைக்குக்

காத்திருப்பேன்
கைக்கெட்டும் தூரத்தில்

பூத்திருப்பேன்
உன் சுவாசப் பாதையில்

நான் சுற்றி திரிவேன்
(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய்

என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கி விடு என்னை
நீ ஒரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை
(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு
உன் நெஞ்சுக்குள்ளே என்னை...
என் நினைவு தோன்றினால்

துளி நீரை சிந்திடு
( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது

இன்று நீ சொன்னது

No comments: