1.10.07

உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது

படம் - கருப்புசாமி குத்தகைக்காரர்
பாடியவர் - BOMBAY JAYASHREE


உப்புக்கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது.. - ஏ
கண்ணிரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது...
ஒத்தச்சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது..
தப்பிச் செல்லக்கூடாதுன்னு கேட்டுக்கிட்டது..
தேதித்தாள போல வீணே நாளும் தேயிற... - நான்
தேர்வுத்தாள கண்ணீரால ஏனோ எழுதுற.....
இது கனவா ...ஆஆ...ஆஆ...ஆ...ஆ
இல்ல நிஜமா...... தற்செயலா..........தாய் செயலா....
நானும் இங்கு நானும் இல்லையே....

(உப்புக் கல்லு......)

ஏதுமில்லை வண்ணமென்று நானும் வாடினேன் - நீ
ஏழுவண்ண வானவில்லாய் என்னை மாத்தினாய்..!
தாயிமில்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன்- நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சத்தாக்கினாய்...!
கத்தியின்றி இரத்தமின்றி காயப்பட்டவள் -உன்
கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மையடைகிறேன்..!
மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் -உன்
நிழல் குடுத்த தைரியத்தால் உண்மையறிகிறேன்...!

(உப்புக் கல்லு......)

மீசைவைத்த அன்னைபோலே உன்னைக்காண்கிறேன்..- நீ
பேசுகின்ற வார்த்தையெல்லாம் வேதமாகுதே.....!
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன்-உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே...!
கட்டிலிண்டு மெத்தையுண்டு ஆனபோதிலும்-உன்
பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே..!
தென்றலுண்டு திங்களுண்டு ஆனபோதிலும் -கண்
நாளுமிங்கு தீண்டவில்லை உனது நினைவினிலே...!

(உப்புக் கல்லு......)

No comments: