28.4.09

மதுரை அரசாளும் மீனாட்சி

படம்: திருமலை தென்குமரி
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
வரிகள்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், LR.ஈஸ்வரி, விஜயா
ராகம்: காபி


மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி

தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
நெல்லையில் அருள் தருவாள் காந்திமதி
அன்னை அவள் அல்லால் ஏது கதி?
(மதுரை அரசாளும் மீனாட்சி)

திரிபுரசுந்தரி சீர்காழியிலே
சிவசக்தி பார்வதி கயிலையிலே
வரம் தரும் கற்பகமாய் மயிலையிலே
வஞ்சமில்லா நெஞ்சில் வாழ்பவளே
(மதுரை அரசாளும் மீனாட்சி)

திருவேற்காட்டினிலே கருமாரி
தென்பொதிகை நகரினிலே முத்துமாரி
சமயபுரம் தன்னில் மகமாயி
சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
சகல சௌபாக்கியம் தந்திடுவாள் மாகாளி
(மதுரை அரசாளும் மீனாட்சி)

....காபி ராக ஆலாபனை...
(மதுரை அரசாளும் மீனாட்சி)

No comments: