28.4.09

ஆடி வெள்ளி தேடி உன்னை

படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்


ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

4 comments:

வடுவூர் குமார் said...

என்னை கிறங்க வைக்கும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.

Natarajan venkatraman. said...

அருமையான கவியரசரின் பாடல்.

Bala said...

பிசிறடிக்காத அழகான குரல், காதை கிழிக்காத ரம்யமான இசை, இயற்கையான சூழல்..... என்ன ஒரு அற்புதமான பாடல்!!!

Unknown said...

அந்தாதி அருமை..அளவிலா ஆனந்தம்..அணிகளும் சிறப்பு..!