19.4.09

இசைத்தமிழ் நீ செய்த

படம்: திருவிளையாடல்
பாடியவர்: T. R. மகாலிங்கம்

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை- நீ
இருக்கையிலே எனக்கேன் பெரும் சோதனை..

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை..
வசைவருமே பாண்டி நாட்டினிலே..
இறைவா...
வசைவருமே பாண்டி நாட்டினிலே..
குழலி மணவாளனே உனது வீட்டினிலே..
உயிர் மயக்கம் நாத பாட்டினிலே

வெற்றி ஒருவனுக்கோ
மதுரை தமிழனுக்கோ..?

இசைத்தமிழ் நீ செய்த..

சிவலிங்கம் சாட்சி சொன்னக்
கதையும் பொய்யோ..!
மாமன் திருச்சபை வழக்குரைத்த
முறையும் பொய்யோ..!

பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பட்ட உன்னை..

பேசும் தமிழ் அழைத்தும்
வாராதிருப்பதென்ன..?

தாய்க்கொரு பழி நேர்ந்தால்
மகற்கில்லையோ.. அன்னை
தமிழுக்கு பழி நேர்ந்தால்
உனக்கில்லையோ..
வேருக்கு நீரூற்றி
விளைக்கின்ற தலைவா...
உன் ஊருக்கு பழி நேர்ந்தால்
உனக்கின்றி எனக்கில்லை

No comments: