4.8.09

ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே

திரைப்படம்: குமாரராஜா
ஆண்டு: 1957
இசை: T.R.பாப்பா
பாடலாசிரியர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
பாடியவர்: P.லீலா


ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே

நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி
வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு
சேரக் கூடாது - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே

வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திட வேணும் - நீ

ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்

மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு

இருந்து விடாதே

No comments: