25.4.06

பாட வந்ததோ கானம்

படம்: இளமைக் காலங்கள்
பாடியவர்கள்: பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், சசிகலா


சுசீலா:
லா லா லா லல்ல லா
லலலா லலலா

குழுவினர்:
தாரத்தத்தத்த தாரத்தத்த
தரத்த தாரரா

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

குழுவினர்:
லா லாலா ....

ஜேசுதாஸ்:
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர் காலம்
நெஞ்சில் வெயில் காலம்

சுசீலா:
அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி
பண் பாடி கண் மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஜேசுதாஸ்:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லாலல் லாலா லாலா
லாலல் லால லா லாலா

குழுவினர்:
லா லா லா லா லா லா.....

சுசீலா:
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

ஜேசுதாஸ்:
தேனே தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள்
விரைந்தால் கடலும் வழி விடும்

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஜேசுதாஸ்:
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

குழுவினர்:
லால லால் லா லா லா
லால லலல்லாலா லா

சுசீலா: லால லலல்லாலா லா
லலலால் லாலாலா

23.4.06

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி


டி.எம்.எஸ்:
ம்ம்ம் ம்ஹ¤ம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று

டி.எம்.எஸ்:
ம்ஹ¤ம் காற்று இல்லே காத்து

சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து

சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

டி.எம்.எஸ்:
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

சுசீலா : ஓஓஓஓஓஓஓ

டி.எம்.எஸ்:
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக

சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக

இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு

டி.எம்.எஸ்:
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி

படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா


பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

(பூஞ்சிட்டு)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

அழகாம் கொடி சிறிது

திரைப் படம்: சத்தியம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் - பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
நடித்தவர்கள்: கமலஹாஸன், ஜெயசித்ரா

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
நீரூற்றி உரமுமிட்டு
நேரம் பாத்து கதிர் அறுத்து
ஆதரிப்போர் இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
சுசீலா: தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்
கொட்டு தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ
மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமா
கை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

சுசீலா:
நடையும் இடையும் கண்டு
நாடி எங்கும் சூடு கண்டு
கடையை விரிக்கிறியே
கதை கதையாய் அளக்கிறியே
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
ஏத்தமிட்டு நீரிறைச்சேன்
நாத்துக்காலு நட்டு வச்சேன்
அறுவடைக்கு நேரமாச்சு அம்மாடி
ஆசை கொஞ்சம் அதிகமாச்சி அம்மாடி

சுசீலா:
நீரூற்றி உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்து நீரூற்றி
உரமுமிட்டுநேரம் பாத்து
கதிர் அறுத்துஆதரிப்போர்
இல்லையின்னா அத்தானே
யார் தரிப்பார் இவ்வுயிரை அத்தானே

பாலா:
அழகாம் கொடி சிறிது
அதிலும் உந்தன் இடை சிறிது
நடையாய் நடந்து சென்றால்
நல்ல இடை வாடாதோ

சுசீலா:
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்
தந்தன தந்தன தாளம்கொட்டு
தக்கிட தக்கிட மேளம்

பாலா:
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
மாலை வருமடியோ மகமாயி துணையிருப்பா
நாலும் நடக்குமடி அம்மாடி
நம்பிக்கையும் பிழைக்குமடி அம்மாடி

சுசீலா:
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
காளியம்மா சத்தியமாகை பிடிக்கவில்லையின்னா
ஆத்துலே உடல் கிடக்கும் அத்தானே
ஆவியெல்லாம் உன்னை சுத்தும் அத்தானே

22.4.06

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.


http://ww.smashits.com/redirect.cfm?ID=11&TrackID=29206

ஆண்:
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

பெண்:
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண்:
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்
தேவதை போலே நீயாட

பெண்:
பூவாடை வரும் மேனியிலே உன்
புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:
கைவளையும் மைவிழியும்
கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்:
ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை
பாத பூசை செய்து வர

பெண்:
ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்
உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:
மல்லிகைக் காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:

வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த
வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)

ஆண்:
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

பெண்:
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

12.4.06

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்...

படம் - கிளிஞ்சல்கள்
வரிகள் -
இசை -
பாடியவர்கள் -

பாடல் ஒலி வடிவில் - http://www.dishant.com/jukebox/playsong.php3?albumid=3562&songid=24441

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You

July i love You

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..


July i love You

July i love You

13.3.06

கண்ணில் என்ன கார்காலம்

படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் - வைரமுத்து
இசை - இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி


பாடல் ஒலி வடிவில் - http://ww.smashits.com/index.cfm?Page=Audio&SubPage=STFListen&TrackID=25317

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...

23.2.06

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்...

படம் : சிகரம்

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உயிரை மேவிடும் உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சதை கலை மறந்தாலும்
கண்கள் இன்றிமைப்பது மறந்தாலும்
நற்றவர் தவ உள்ளிருந்தோம்பும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
நமச்சிவாயத்தை நான் மறவேனே

16.2.06

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

படம் - பாபு

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

13.2.06

செண்பகமே செண்பகமே...

படம் - எங்க ஊரு பாட்டுக்காரன்

பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனசு
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் பறிக்க
துடிக்குதந்த செண்பகம்

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்துப் பார்த்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பார்த்து பார்த்து நின்னேனே

உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் தானா பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போதும் வந்து தொட்டு
பாடப்போறேன் தன்னாலே

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு
உன்ன விட்டுப் போகாது

செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே

தென்பொதிகை சந்தனமே

படம் - எங்க ஊரு பாட்டுக்காரன்
பாடியவர் - Asha Bhosle


செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
காத்து காத்து நின்னேனே
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு
என் மனம் ஏனோ பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் உன்னை பின்னாலே
எப்போ நீ என்னத்தொட்டு
பேசப்போறே முன்னால

செண்பகமே செண்பகமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே


பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு
மேளம் கொட்டிக் கல்யாணம்
பூ மஞ்சம் போட்டுக் கூட
எங்கே அந்த சந்தோசம்

உன்னடி தேடி நான் வருவேனே
உன் மடி பார்த்து நான் இருப்பேனே
ராஜாவே உன்னைத் தொட்டு
நானும் வாழ மாட்டேனா
என் வீட்டுக்காரர் பாட்டும்
காதில் கேட்க மாட்டேனா

செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே