10.12.04

ஊருக்கும் வெட்கமில்லை

படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: ஜேசுதாஸ்
எழுதியவர் - தெரியவில்லை


ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!

4 comments:

ரவி ஸ்ரீநிவாஸ் said...

song by kannadasan
music m.s.visvanathan
film yarukkum vedkamillai
direction cho
year 1975 (?)

Chandravathanaa said...

வணக்கம் ரவி சிறீனிவாஸ்

தொடர்ந்தும் இப்படியான ஒத்துழைப்புகளைத் தந்து எனது பதிவுகளை நிறைவாக்குங்கள்.
நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa said...

வணக்கம்

உங்கள் கருத்துக்கு நன்றி.
நானும் இது பற்றிப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனாலும் செயற் படுத்தவில்லை.
நீங்களும் சொன்ன பின் கட்டாயம் பாடல்களைத் தேடி எடுத்து இணைக்க வேண்டுமென்ற
எண்ணம் வந்துள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும் விரைவில் செயற் படுத்துகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa said...

வணக்கம் Jsri

உங்கள் கருத்துக்கு நன்றி.
நானும் இது பற்றிப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனாலும் செயற் படுத்தவில்லை.
நீங்களும் சொன்ன பின் கட்டாயம் பாடல்களைத் தேடி எடுத்து இணைக்க வேண்டுமென்ற
எண்ணம் வந்துள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும் விரைவில் செயற் படுத்துகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா