12.5.06

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

படம் : ஆயிரத்தில் ஒருவன்
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : வாலி
நடிகை : ஜெயலலிதா

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

(ஆடாமல்)

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்..

(ஆண்டவனை)

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

(ஆண்டவனை)

2 comments:

Ram.K said...

சுசீலாவின் குரல் கண்ணீருடன் ஒலிப்பது மனதைப் பாதிக்கும்.

Chandravathanaa said...

நன்றி பச்சோந்தி.
மனதைத் தொடும் பாடல்களில் ஒன்று.