11.5.06

அலை பாயுதே கண்ணா...

படம் - அலைபாயுதே
இயற்றியவர் : ஊத்தக்காடு வேங்கடசுப்பையர்
இராகம் : கானடா
தாளம் : ஆதி


பல்லவி:
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

அனுபல்லவி:
நிலை பெயராது சிலை போலவே நின்று
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே
மிக விநோதமான முரளிதரா
என் மனம் அலை பாயுதே
கண்ணா....

சரணம்:
தெளிந்த நிலவு பட்டப் பகல் போல் எரியுதே
திக்கு நோக்கி என்னிரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே!

தனித்த மனத்தில் உருக்கி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா!
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழல் எனக்களித்தவா!
கதறி மனமுருகி நான் அழைக்கவா
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ? இது முறையோ?
இது தருமம் தானோ?

குழல் ஊதிடும் பொழுது ஆடிடிடும்
குழைகள் போலவே
மனது வேதனை மிகவோடு

அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்
அலை பாயுதே கண்ணா

4 comments:

Chandravathanaa said...

கருத்துக்கு நன்றி யோகன்.
இசை ஏ ஆர் .ரகுமான் என்றிருக்கிறதா...?

கால்கரி சிவா said...

சந்திரவதனா, சுதா ரகுநாதனின் குரலில் இந்தப் பாடல் மிக அருமையாக இருக்கும்

Suka said...

நல்ல பாடல்.. எம்.எஸ் குரலிலும் அருமையாக இருக்கும்.

அலைபாயுதே திரைப்படத்தில் பாடல் வரிகள் சிறிது மாறியுள்ளது என நினைக்கிறேன்.

Chandravathanaa said...

கால்கரி சிவா, சுகா
கருத்துக்களுக்கு நன்றி.