Showing posts with label பங்குனி மாதத்தில் ஓரிரவு. Show all posts
Showing posts with label பங்குனி மாதத்தில் ஓரிரவு. Show all posts

15.5.09

பங்குனி மாதத்தில் ஓரிரவு

படம் - தாழம்பூ

பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கு தனியே தவித்தது பெண்ணழகு
பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு
அங்கு தனியே தவித்தது பெண்ணழகு
பங்குனி மாதத்தில் ஓரிரவு

காதல் தலைவன் வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
காதல் தலைவன் வரவில்லையாம்
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்
தூது விட்டாலும் பதில் இல்லையாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்
அவள் துடித்தாளாம் எண்ணித் தவித்தாளாம்
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
வரும் மணியோசை தனை இடி என்றாள்
மல்லிகை மலரை நெருப்பென்றாள்
வரும் மணியோசை தனை இடி என்றாள்
மெல்லிய பனியை மழை என்றாள்
தன் மேனியையே வெறும் கூடென்றாள்

பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால் போல் சிரித்தது வெண்ணிலவு

காலடி ஓசை கேட்டு விட்டாள்
அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்
காலடி ஓசை கேட்டு விட்டாள்
அந்தக் கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்
நாலடி நடந்தாள் முன்னாலே
அங்கு நடந்தது என்னவோ பின்னாலே

பங்குனி மாதத்தில் ஓரிரவு