15.5.07

கண்ணின் மணியே கண்ணின் மணியே

படம் - மனதில் உறுதி வேண்டும்.
பாடியவர் – சித்ரா
நடித்தவர் - சுகாசினி




கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்

வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா

அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்

ஊமைகள் தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா

சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்
மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்

மீசை துடித்ததம்மா

வீடாளும் பெண்மை இங்கே
நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும்
ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான்
இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற
சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்

வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா

அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்

ஊமைகள்தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா

பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு
காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு

காதல் அடிமைகளா

பொன் அள்ளி வைத்தால்தான்
பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம்
பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில்
அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி
கலங்குது மயங்குது பருவக்கொடி

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்

வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா

அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்

ஊமைகள்தானா

கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன

கண்களில் என்ன
நீரோட்டமா

11.5.07

அற்றைத் திங்கள் வானிடம்

திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன,சுஜாதா
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்
இயற்றியவர் : யுகபாரதி




பெண்
அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்
அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்
சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்
சொக்கும் ராகம் யாரிடம்
பெண்
காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்
பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


பெண்
அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை

ஆண்
பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

பெண்
முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

ஆண்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர் வீசும்

பெண்
குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் மேய்ந்திட

ஆண்
மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட

பெண்
காணுகின்ற காதல் என்னிடம்

ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்

ஆண்
உடலெது உடையெது தேடும் நிலையிது
காதல் கடலிது அடையாது

பெண்
இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

ஆண்
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது

பெண்
வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

ஆண்
நடுங்காலம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்

பெண்
தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்

ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்

பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

10.5.07

எங்கே எனது கவிதை

படம் - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
வரிகள் - வைமுத்து




எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை


விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை


மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை
உருகி உருகி மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று

இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
விரை வந்தவுடன் நிலா வந்தவுடன்

நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று

இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட
ஒரே தொடுதல் மனம் ஏங்குதே
முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது
நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பக் கணம் கேட்குதே
கேட்குதே...

பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

8.5.07

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை

படம் - ஒரு நாள் ஒரு கனவு
இசை - இளையராஜா
பாடியவர்கள் - Hariharan, Shreya Ghosal, Pavatharani, Illayaraja, Sadhana Sargam


காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு ஆ..
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன்தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா


ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்றே
அதக்கேற்ற லயம் எந்தன் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா


அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

5.5.07

உன்னோடுதான் இனி உன்னோடுதான்

படம் - எம்டன் மகன்
பாடியவர்கள் -
இசை - வித்யாசாகர்
வரிகள் -
நடித்தவர்கள் - பரத், கோபிகா

Cast: Bharath, Gopika
Music Director: Vidya Sagar
Director: Thirumurugan
Producer: Sathyajyothi Thyagarajan
Lyrics:
Year: 2006