12.5.06

விழியே விழியே உனக்கென்ன வேலை

படம் : புதிய பூமி
குரல் : டி.எம்.எஸ், பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.

விழியே விழியே உனக்கென்ன வேலை
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக - நீ
தூது சொல்லடி மெதுவாக
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக

விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
மருந்து தந்தாலும் தரலாம்
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
இங்கு நான்கு கண்களூம் உறவாட...
இங்கு நான்கு கண்களூம் உறவாட...

கன்னம் என்னும் ஒரு கிண்ணத்திலே
கறந்த பாலிருக்கும் வண்ணத்திலே
கரும்புச் சாறு கொண்டு வருவாயோ
கிளியே கொஞ்சம் தருவாயோ
கேட்டுத் தருவது சரிதானா
கிளியின் சொந்தம் என்ன அதுதானா
பாலும் பழமும் தேனும் தினையும்
நாலும் தருவேன் மேலும் தருவேன்
என்ன வேண்டும் இன்னும் சொல்லலாமா

(விழியே)

காவேரிக் கரையின் ஓரத்திலே
தாலாட்டும் தென்றல் நேரத்திலே
கலந்து பேசிக் கொள்ள வருவாயோ
கனியே கொஞ்சம் தருவாயோ
ஆற்றங்ரை என்ன அவசியமா
அதிலும் சொந்தம் என்ன ரகசியமா
தேதி குறித்து ஊரை அழைத்து
காலம் அறிந்து மாலை அணிந்து
தர வேண்டும் தந்து பெற வேண்டும்

(விழியே)

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்

படம் : ஆயிரத்தில் ஒருவன்
குரல் : பி.சுசீலா
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : வாலி
நடிகை : ஜெயலலிதா

ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
நான் ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா

(ஆடாமல்)

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்க பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார்
யார் கூடுவார்..

(ஆண்டவனை)

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம்பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்
யார் தேற்றுவார்

(ஆண்டவனை)