31.5.09

நாளைப் பொழுது உந்தன்

படம்: பொற்சிலை
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்


நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா
நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
பசி என்று வந்தவர்க்குப் புசி என்று தந்தவரைப்
பரமனும் பணிவானடா கனிந்து பக்கத்தில் வருவானடா
ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் செய்து வைத்த
ஜாதியும் இரண்டேயடா தலைவன் நீதியும் ஒன்றேயடா

நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா

போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
போட்டி பொறாமைகளும் பொய் சூது சூழ்ச்சிகளும்
ஈட்டியின் முனை போலடா அதனை எய்தவன் மடிவானடா
சத்திய சோதனையை சகித்துக் கொண்டே இருந்தால்
வெற்றியைக் காண்பாயடா அதுவே வேதத்தின் முடிவாமடா

நாளைப் பொழுது உந்தன் நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா இறைவன்
நம்பிக்கை தருவானடா