Showing posts with label எண்ணப்பறவை சிறகடித்து. Show all posts
Showing posts with label எண்ணப்பறவை சிறகடித்து. Show all posts

12.10.06

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில்...

படம்: கார்த்திகை தீபம்
பாடியவர்: பி சுசீலா
பாடியவர்:T.M.சௌந்தரராஜன்
இசை: R.சுதர்சனம்
பாடலாசிரியர்:ஆலங்குடி சோமு


எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..

தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..

உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா..
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா..

(எண்ணப்பறவை)

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா..
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா..

அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா..
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா..

(எண்ணப்பறவை)